அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பங்களிப்பு
ஓய்வூதியத் திட்டம் அமுல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தால் அவர்களுக்கு
எந்த பலனும் இல்லை என கூறுகின்றனர். இந்த திட்டம் இரத்து செய்யப்படும் என
ஏற்கனவே அதிமுக வாக்குறுதி அளித்துள்ளதையும் அரசு ஊழியர், ஆசிரியர்
சுட்டிக்காட்டுகின்றனர்.
சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் 10 சதவீத
பணம் எங்கே போகிறது என்றும் அவர்களுக்கு தெரியவில்லை. இந்த விவகாரத்தில்
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போதுள்ள திட்டத்தை இரத்து செய்ய
வேண்டும் என எழுப்பட்ட கேள்விக்கு மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள்
கீழ்வரும் பதிலளித்துள்ளார்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அனைத்து
மாநிலங்களிலும் அமலில் உள்ளது. எனினும் இத்திட்டம் தமிழக அரசின் ஆய்வில்
உள்ளது என தெரிவித்துள்ளார்.
மார்ச்சில் நடக்கும், பிளஸ் 2 பொதுத் தேர்வை, தனி தேர்வாக எழுத
விரும்பும் தேர்வர்கள், சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ், இணையதளம் வழியாக
விண்ணப்பிக்கலாம். தேர்வெழுத விரும்புபவர்கள், www.dge.tn.nic.in என்ற
இணையதளத்தில், 11ம் தேதி முதல், 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
அண்ணா பல்கலை துணைவேந்தரின் ஓய்வு வயதை, 65லிருந்து, 70 ஆக உயர்த்தும்,
சட்ட திருத்த மசோதா, சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
அரசு தொடக்கப் பள்ளிகளில், குறைந்து வரும் மாணவர் சேர்க்கையை
அதிகரிக்கவும், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரத்தை மேம்படுத்தவும்,
பள்ளி கல்வித்துறை சார்பில் அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்காக, ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள்
வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
தேசிய அளவில், சி.ஏ,.தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, சாதனை படைத்த
பிரேமாவிற்கு, பாராட்டு விழா நடத்த, சொந்த கிராம மக்கள் ஏற்பாடு செய்து
வருகின்றனர்.
"நம் நாட்டில், ஆசிரியர்களின் கல்வி போதிக்கும் திறன், எதிர்பார்ப்பை
பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. கல்வித் துறையில் உள்ள, முக்கிய
பிரச்னைகளுக்கு, உடனடியாக தீர்வு காண வேண்டும்," என பிரதமர் மன்மோகன் சிங்
பேசினார்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப்
பணியாளர்களை, தேர்வு செய்வதற்கான அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) சமீபத்தில் வெளியிட்டது. இதில், நீண்ட
நாட்களுக்குப் பிறகு தேர்வு முறையை டி.என்.பி.எஸ்.சி., மாற்றி
அமைத்துள்ளது.
தமிழகத்தில், சுற்றுச்சூழலை பாதுகாக்கும்
விதமாக, 3,200 பள்ளிகளில், "பசுமை குழு"க்கள் அமைக்கவும், 1,000
பள்ளிகளில், மண், காற்று, நீர் ஆய்வுக்கான, உபகரணங்கள் வாங்கவும், 1.35
கோடி ரூபாய் ஒதுக்கி அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டில் வேலைவாய்ப்பு
அலுவலகத்தில் காலக் கெடுவிற்குள் புதுப்பிக்க தவறியவர்கள் வரும் 28ம்
தேதிக்குள் ஆன்லைன் மூலம் புதுப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி
ஆசிரியராக உட்படுத்திட வலியுறுத்தி பிப்ரவரி 26ம் தேதி மாவட்டத்
தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது என மதுரையில்
நடைபெற்ற தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு
கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வில் வெற்றி
பெற்றவர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை டி.என்.பி.எஸ்.சி.,
இணையதளத்தில் பார்க்கலாம்.
நாட்டிலுள்ள உயர் கல்வி நிறுவனங்கள்
திருப்திகரமான வகையில் இயங்கவில்லை. உலகிலுள்ள தரமான, 200
பல்கலைகழகங்களில், இந்திய பல்கலைகழகம் எதுவும் இடம் பெறவில்லை; இந்த நிலை
மாற வேண்டும்.
தரத்திற்கும், தொழில் நுட்பத்திற்கும், பல்கலைகழகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
உதவி தொடக்கக் கல்வி அலுவலகம் கம்ப்யூட்டர் மயமாக்கப்படாததால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே, பிற அலுவலங்களைப் போல்
உதவி தொடக்க கல்வி அலுவலகமும் கம்ப்யூட்டர் மயமாக்க வேண்டும் என கோரிக்கை
விடுத்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில், தொழிலாளர் வருங்கால
வைப்பு நிதிக்கான வட்டி வீதத்தை, 8.5 சதவீதமாக்க, மத்திய அரசு
திட்டமிட்டுள்ளது. மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய
நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.
நடுவண் அரசு 01.01.2004ல் நாடு முழுவதும்
பணிபுரியும் மத்திய அரசு பணியாளர்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு
நடைமுறைப்படுத்தப்பட்டது.
டான்செட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வினியோகம், தமிழகம் முழுவதும் 15 மையங்களில் ஆன்-லைன் முறையில் இன்று துவங்குகிறது.
Prepared By, Mr. P. Sakthivel, M.Sc., B.Ed., M.Phil.,
P. Vinayagamoorthy,D.T.Ed., B.Sc., B.Ed.,
P. Saraswathi,D.T.Ed., B.Sc.,
Avalur, Kanchipuram District.
டி.என்.பி.எஸ்.சி., மூலம், 10 ஆயிரத்து, 105
காலி பணியிடங்களுக்கு, இந்த ஆண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. கடந்த ஆண்டை
காட்டிலும், 8,000 பணியிடங்கள் குறைந்துள்ளன.
சமச்சீர் கல்வி நடைமுறைக்குப் பின், கடந்த
ஆண்டில் இருந்து, 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ, மாணவியருக்கும்,
அறிவியல் பாடத்தில், செய்முறைத் தேர்வு நடத்தப்படுகிறது.
சென்னை பல்கலைக்ககழகத்தில், இளநிலை பட்டப்படிப்புக்கான தேர்வு முடிவுகள் நாளை இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
(Without Watermark GO will Publish Tomorrow)
2009-10 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 200 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 200 ஆய்வக உதவியாளர் பணியிடம்
அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
2010-11 ல் ஆர்.எம்.எஸ்.ஏ
மூலம் தரம் உயர்த்தப்பட்ட 344 உயர்நிலைப்பள்ளிகளுக்கு 344 ஆய்வக உதவியாளர் பணியிடம்
மற்றும் 344 இளநிலை உதவியாளர் பணியிடம் அரசாணை 67 நாள் 16.03.2012 மூலம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடக்கப்பள்ளி
மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் வழங்கப்பட்டுவரும்
10 நாள் உறைவிடமில்லா பயிற்சி மாநில திட்ட இயக்குநர் உத்தரவின் பேரில் தற்காலிகமாக
இரத்து செய்யப்பட்டுள்ளது.
9 மற்றும் 10ஆம் வகுப்பு பாடம் நடத்தும் பட்டதாரிகளுக்கு
தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமுக அறிவியல் ஆகிய பாடங்களில்
04.02.2013 முதல் 23.02.2013 வரை நடக்க வேண்டிய பணியிடைப் பயிற்சி
தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்
என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மாணவர்கள் தன்னை பற்றி மனதில் நான்
இப்படி தான்? எனக்கு திறமையில்லை? என்னால் முடியாது? .... என்ற தாழ்வான
கருத்து மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் டென்செட் -2013 நுழைவுத் தேர்வு நடைபெறும் தேதிகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
பெண்களின் கல்வி உரிமைக்காக, குரல் கொடுத்ததால், தலிபான்களால்
சுடப்பட்டு, உயிர் பிழைத்த பாகிஸ்தான் சிறுமி, மலாலாவின் பெயர், நோபல்
பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள், பருவநிலை மாற்றம் குறித்து அறிவதற்கு, உலக இயற்கை
நிதியம், ஆசிரியர்களுக்கான புதிய கையேடு தயாரித்துள்ளது. இதில், எளிய
வகையில், மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், செய்முறை பயிற்சிகள்
கொடுக்கப்பட்டுள்ளன.
மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1
மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டுக்கான பாடங்களை இப்போதே நடத்த
துவங்கியுள்ளனர்.
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன்
பகிரவும். நன்றி.
தமிழ்நாடு
அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) குரூப்-2 தேர்வை ஆகஸ்டு
12-ந் தேதி நடத்தியது.
ஆசிரியர் பணி நியமனத்துக்கான தகுதி தேர்வில்,
தகுதி மதிப்பெண்ணை தளர்த்தக் கோரிய மனுக்களை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
செய்தது. நிர்ணயிக்கப்பட்ட தகுதியை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்; அதை
மீறி நடக்கும் நியமனங்கள் செல்லாது என கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு, ஜூன் மாதம், பள்ளி துவங்குவதற்கு
முன், மூன்றாவது, டி.இ.டி., தேர்வை நடத்தி, அதன் வழியாக, 15 ஆயிரம்
ஆசிரியர்களை, புதிதாக தேர்வு செய்ய, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது.
பள்ளி கல்வித் துறையில், 561 இளநிலை
உதவியாளர்கள், நேற்று, பணி நியமனம் செய்யப்பட்டனர்.