Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பதிவு மூப்பு அடிப்படையில் நியமிக்க ஆசிரியர்கள் கோரிக்கை.
தொடக்கக்கல்வித் துறை சார்ந்த அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான 2012 - 2013 ஆம் ஆண்டு முன்னுரிமை மற்றும் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து வெளியிட தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு.
தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண். 04404 / இ1 / 2012, நாள். 04.05.2012.
2012 - 2013 ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான முன்னுரிமை(SENIORITY) மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு,பதவி உயர்விற்கு தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் (PANEL) தயாரித்து நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பார்வை1, 2ல் காணும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் / வழிகாட்டுதல் மற்றும் பார்வையில் காணும் அரசாணை ஆகியவற்றினை தவறாமல் பின்பற்றிட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2012 - 2013 ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான முன்னுரிமை(SENIORITY) மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், தமிழ் ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கு,பதவி உயர்விற்கு தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் (PANEL) தயாரித்து நடைமுறைப்படுத்துதல் சார்ந்து பார்வை1, 2ல் காணும் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகள் / வழிகாட்டுதல் மற்றும் பார்வையில் காணும் அரசாணை ஆகியவற்றினை தவறாமல் பின்பற்றிட அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பவானிசாகர் குடியுரிமை பயிற்சி நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு - மாண்புமிகு தமிழக முதலமைச்சர் உத்தரவு.
தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஜெயலலிதா பவானி சாகரில் உள்ள குடியுரிமை பயிற்சி நிலையத்தை மேம்படுத்துவது பற்றி ஆற்றிய உரை குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அறிக்கையில், அரசு ஊழியர்களுக்கான அடிப்படைப் பயிற்சியின் அவசியத்தை கருத்தில் கொண்டும்; ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் உள்ள குடியுரிமை பயிற்சி நிலையத்தை (Civil Service Training Institute) சிறந்த பயிற்சி நிலையமாக உருவாக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தைக் கருத்தில் கொண்டும்; 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறைகள், நூலகம், உள் விளையாட்டு அரங்குகள், பதிவறைகள், ஆசிரியர்களுக்கான தனியறைகள், நிர்வாக அலுவலகத்திற்கான கட்டடம், காணொலி கண்காட்சி அரங்கம், தங்கும் விடுதிகள், பணிபுரிபவர்களுக்கான குடியிருப்புகள், நவீன உணவுக் கூடம், மருத்துவ மையம், விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் கொண்ட பயிற்சி நிலையமாக பவானிசாகர் அரசு பயிற்சி நிலையம் மாற்றி அமைக்கப்படும்.
இந்த பயிற்சி நிலையத்தில், இளநிலை உதவியாளர்கள், உதவியாளர்கள் போன்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பல்வேறு வகையான நிர்வாக செயல்முறைகளில் அடிப்படைப் பயிற்சியும்; துணை வட்டாட்சியர்களுக்கு பணியிடைப் பயிற்சியும் அளிக்கப்படுகின்றன என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி முடிந்தது - மே மாதம் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு.
தமிழகத்தில் சமச்சீர் கல்வி முறையில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய மாணவ, மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்துள்ளது. தற்போது, மதிப்பெண்களை மதிப்பெண் பட்டியலுக்காக கணினியில் பதிவு செய்யும் பணிகள் நடந்து வருகிறது.
அதுவும் இந்த வாரத்திலேயே முடிவடைந்து மே மாதம் இறுதி வாரத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளதாக தேர்வுகள் இயக்குநரக வட்டாரங்கள் கூறுகின்றன.
வழக்குத் தொடர்ந்த பள்ளிகள் மட்டுமே கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம் - மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செந்தமிழ் செல்வி.
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்த பள்ளிகள் மட்டுமே, கோர்ட் உத்தரவுப்படி, இடைக்கால ஏற்பாடாக, 15 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கலாம். வழக்கு தொடராத பள்ளிகள், கூடுதல் கட்டணம் வசூலித்தால், துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணை வெளியீடு
தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு அட்டவணைகளை அரசுத் தேர்வுகள்
இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்டுள்ளது.
முதலாமாண்டு தேர்வு அட்டவணை:
- ஜூலை 4 - புதன் - கற்கும் குழந்தை
- ஜூலை 5 - வியாழன் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும்-1
- ஜூலை 6 - வெள்ளி - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உருது, மலையாளம்) - 1, இளஞ்சிறார் கல்வி - 1
- ஜூலை 9 - திங்கள் - ஆங்கில மொழிக் கல்வி - 1
- ஜூலை 10 - செவ்வாய்- கணிதவியல் கல்வி -1
- ஜூலை 11 - புதன் - அறிவியல் கல்வி -1
- ஜூலை 12 - வியாழன் - சமூக அறிவியல் கல்வி-1
- ஜூன் 25 - திங்கள் - இந்திய கல்வி முறை
- ஜூன் 26 - செவ்வாய் - கற்றலை எளிதாக்குதலும், மேம்படுத்துதலும் - 2
- ஜூன் 27 - புதன் - மொழிக் கல்வி (தமிழ், தெலுங்கு, உறுது, மலையாளம்) -2, இளஞ்சிறார் கல்வி - 2
- ஜூன் 28 - வியாழன் - ஆங்கில மொழிக் கல்வி -2
- ஜூன் 29 - வெள்ளி - கணிதவியல் கல்வி - 2
- ஜூன் 30 - சனி - அறிவியல் கல்வி - 2
- ஜூலை 2 - திங்கள் - சமூக அறிவியல் கல்வி - 2
ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கான பட்டியல்கள் தயாரிப்பு
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க அரசு உரிய நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
மே 15ம் தேதி முதல் மருத்துவ விண்ணப்பங்கள்
இந்தக் கல்வியாண்டில்(2012), மருத்துவம் மற்றும் பல் மருத்துவ
படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் வரும் 15ம் தேதி முதல் வழங்கப்படுகின்றன.
இத்தகவலை, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் விஜய் தெரிவித்தார்.
மே 11ம் தேதி முதல் பொறியியல் விண்ணப்பங்கள் விநியோகம்
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் படிப்பில் சேர
விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் வரும் மே 11ம் தேதி முதல்
வழங்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் மாதிரி கருத்துரு
அரசு ஊழியர்களாக பணியாற்றும் மாற்று திறனாளிகளுக்கான போக்குவரத்து படி கோரும் முழு மாதிரி கருத்துரு இங்கு தரப்பட்டுள்ளது.
Click Here & Download Proposal & HM's Proceeding
Click Here & Download Director's Proceeding
கருத்துருக்கு தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெறப்பட்ட விளக்கம் இங்கு தரப்பட்டுள்ளது.
Click Here & Download Letter
தமிழ் விடைத்தாள் திருத்துவது தாமதம் - தேர்வுமுடிவு தள்ளிப்போகுமா?
சிவகங்கை: தமிழ் விடைத்தாள் திருத்தும் பணி தேக்கத்தால், எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவு அறிவிப்பு தள்ளிப்போகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிர்ணயித்த கல்வி கட்டணத்தை ரத்து செய்தது ஐகோர்ட்
தனியார் பள்ளிகள், சிறுபான்மை பள்ளிகள் 318 க்கு, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை, சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்தப் பள்ளிகளுக்கு வரும் டிசம்பருக்குள் புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
அரசு கூட்டுறவு சங்கத்தில் ஆசிரியர்கள் பெற்ற கடனை மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய உத்தரவு.
வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 8323 / அ2 / 2012, நாள். 02.05.2012.
1முதல் 8ம் வகுப்பு வரையான முப்பருவ பாடத்திட்டம்.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் இருந்து முப்பருவ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த பாடத்திட்டத்தின் கீழ் ஒரு பருவத் தேர்வுக்கு அதாவது காலாண்டு வரை 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள் ஒரே ஒரு புத்தகத்தை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். ஒரு புத்தகத்திலேயே 5 பாடங்கள் அமைந்திருக்கும். அரையாண்டுத் தேர்வுக்கு இரண்டாவது பருவப் புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அது முடிந்ததும் 3வது பருவப் பாடப்புத்தகத்தை எடுத்துச் சென்று படிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக சட்டப் பேரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
விதி எண் 110 கீழ் அறிக்கை ஒன்றை வாசித்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெ . ஜெயலலிதா, தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ள 62 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்றார். மேலும், 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும் என்று கூறினார். இதுவரை இல்லாத அளவு உயர் ஒதுக்கீடாக இந்த நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த முதலமைச்சர் ஜெயலலிதா, இதன் மூலம் அரசு கல்லூரிகள் மேம்பாடு அடையும் என்று குறிப்பிட்டார். கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் நல்ல சூழ்நிலையில் உற்சாகத்துடன் கல்வி பயில்வதை உறுதி செய்வதில் தமது அரசு முனைப்பாக உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.
கூடுதல் விடைத்தாள்களால் ஆசிரியர்கள் திணறல்.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் முகாம்களில், அதிக விடைத்தாள்களை திணிப்பதால், திருத்தம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர். இதனால், பத்தாம் வகுப்பு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் 66 முகாம்களில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு காலை 15 , மாலை 15 என, 30 விடைத்தாள்கள் மட்டுமே திருத்த வேண்டும்.
இதன் பணிகளை விரைந்து முடிக்க, காலை 20 , மாலை 20 என ,40 விடைத்தாள்களை முகாம் அலுவலர்கள் வழங்குகின்றனர்.
இதனால் அவசரமாக திருத்தம் செய்யும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். சமச்சீர் பாடத்திட்டத்தில் போதிய அனுபவம் இல்லாத நிலையில் தாமதமும் ஏற்படுகிறது.
அவசரம் காரணமாக தவறுகள் நடக்கவும் வாய்ப்புள்ளதால், மாணவர்களும் பாதிக்கும் நிலை உள்ளது.
பட்டதாரி ஆசிரியர் சங்கம், தமிழாசிரியர்கள் கழகத்தினர் கூறுகையில், "ஆசிரியர்களிடத்தில் விடைத்தாள்களை திணிக்க கூடாது. அதிக ஆசிரியர்கள் தேவை என்றால், கூடுதல் ஆசிரியர்களை அனுமதிக்க வேண்டும். குறைந்த விடைத்தாள் மையங்களுக்கு அதிக விடைத்தாள்கள் அனுப்ப தேர்வுத்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்," என்றனர்.
பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2012 முதற்கொண்டு அகவிலைப்படி 139% உயர்த்தி தமிழக அரசு உத்தரவு.
தமிழக அரசாணை எண். 145 நிதி(படிகள்)த் துறை நாள். 30.04.2012
அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 139 சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பாட ஆசிரியர் மாறுதலுக்கு பின்னரே, பொது மாறுதல்
அரசு பள்ளிகளில், குறிப்பிட்ட பாட ஆசிரியர்கள் எண்ணிக்கை, அதிகளவில் இருப்பதால், அவர்களை மாறுதல் செய்த பிறகே, ஆசிரியர் பொது மாறுதல், கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. எனவேதான், விண்ணப்பங்கள் பெறுவது நிறுத்தப்பட்டு உள்ளதாக, துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு: விரைவில் தேர்வு முடிவுகள்
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நிறைவு பெற்றுள்ளது. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு, ஏப்., 8ம் தேதி துவங்கி, 30ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
Promotion Of Culture Of Heritage Edn - Introduction of Museum Visit by Students Once in a Year as Part of Edn & Curriculam.
Proceedings of the Director of Elementary Education RC.No. 7684 / J3 / 2012, Dated. 04.04.2012
A Museum is an Institution that cares for collection of artifacts and other objects of Scientific, artistic, cultural, that is as static in a word " Collection of Collections ". Museum favoured Education over preservation of their objects.
To Create awareness of our culture and heritage Education are essential for the present day children, once they make a visit to the museum. In CCE the visit to the museum, Include as on activity of Government process.
நெடுஞ்சாலைத்துறை,பதிவுத் துறை , மக்கள் நல வாழ்வு மற்றும் போக்குவரத்துத்துறை ஆகிய துறைகளில் ஏற்படும் காலிப்பணியிடங்கள் 50% நேரடி நியமனம் மூலம் நிரப்ப தமிழக அரசு உத்தரவு
இங்கே கிளிக் செய்து துறை வாரியான அரசாணைகளை டவுன்லோட் செய்து படியுங்கள்
நெடுஞ்சாலைத்துறை பதிவுத் துறை
குடும்ப நலத் துறை
போக்குவரத்துத்துறை
மாணவர் நலத் திட்டங்களைச் செயல்படுத்த இணை இயக்குநர்கள் நியமனம்: பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி
மாணவர் நலத்திட்டங்களைச் சிறப்பாக செயல்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் கண்காணிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி அமைச்சர் என்.ஆர். சிவபதி கூறினார்.
சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.