Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் நிறைவு: விடைத்தாள் திருத்தும் பணி 21-ல் தொடக்கம்

1358168
பத்​தாம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு இன்றுடன் (ஏப்​.15) நிறைவு பெறுகிறது. தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12-ம் வகுப்​பு​களுக்கு பொதுத் தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி நடப்​பாண்டு 11, 12-ம் வகுப்​புக்​கான பொதுத் தேர்வு கடந்த மார்ச் 3 முதல் 27-ம் தேதி வரை நடத்​தப்​பட்​டது.

இதையடுத்து பத்​தாம் வகுப்​புக்​கான பொதுத்​தேர்வு மார்ச் 28-ல் தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. இந்த தேர்வை மாநிலம் முழு​வதும் அமைக்​கப்​பட்​டுள்ள 4,113 மையங்​களில் சுமார் 9 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழுதுகின்​றனர். அதன்​படி தமிழ், கணிதம், அறி​வியல் மற்​றும் ஆங்​கிலம் பாடங்​களுக்​கான தேர்​வு​கள் முடிந்​து​விட்​டன.

இதைத் தொடர்ந்து பத்​தாம் வகுப்பு பொதுத் தேர்வு இன்றுடன் (ஏப்​.15) நிறைவு பெறுகிறது. இறுதி நாளில் சமூக அறி​வியல் பாடத் தேர்வு நடை​பெற உள்​ளது. இதுகுறித்து தேர்​வுத் துறை அதி​காரி​கள் கூறுகையில், ‘‘பொதுத்​தேர்வு முடிந்​ததும் மாணவர்​களின் விடைத்​தாள்​கள் 118 மண்டல சேகரிப்பு மையங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​படும்.

அங்​கிருந்து திருத்​துதல் மையங்​களுக்கு ஏப்​.17-ம் தேதி முதல் அனுப்பி வைக்​கப்​படும். தொடர்ந்து ஏப்​ரல் 21 முதல் 30-ம் தேதி வரை விடைத்​தாள் திருத்​துதல் பணி​கள் நடை​பெற உள்ளன. தொடர்ந்து மதிப்​பெண் பதிவேற்​றம் உள்​ளிட்ட பணி​களை முடித்து திட்​ட​மிட்​டபடி தேர்வு முடிவு​கள் மே 19-ம் தேதி வெளி​யிடப்​படும்’’ என்றனர்.





Related Posts:

1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!