
கதை சுருக்கம்:
( இந்த மாதத்திற்கான சிறார் திரைப்படம் ஆறு திரைபடங்களின் தொகுப்பு )
1.பெனோ
பிறக்கும் போது சந்தோஷமாக பிறந்தார்.
அவரது பெற்றோருக்கு அவளது கண்களில் ஒளியில்லை என உணர்ந்த பிறகு துயரத்தில்
விழுந்தது குடும்பம்,இருந்தாலும் மருத்துவம் கை விரித்தாலும், அவளின் அறிவு
பள்ளிப்படிப்பு தொடங்கி கல்லூரி படிப்பு வரை எதிலும் முதலாய் முன்னேற
வைத்தது. மகளின் அறிவு பெற்றோரை மகிழ்ச்சி கடலில் நீந்த வைத்தது.அவளது
கல்லூரி அவளின் கனவுகளுக்கு விதையாய் இருந்தது, ஒளியில்லாத விழி அதற்கு வழி
தந்த பிரையில் வழி கல்வி, பெனோவின் கனவு அரசின் குடிமை தேர்வில் வெற்றி
பெற வேண்டும் என்பதே,அது அவளுக்கு சாத்தியமா என்பது கேள்விக்குறி, காரணம்
தேர்வுக்கான புத்தகம் விழி இழந்தோர் படிக்கின்ற பிரையில் வழியில் இல்லை.
சர்வதேச நாடுகளில் பங்குபெற்ற ஒரு நிகழ்வில் வசந்தம் போல் முதன்மையானவள்
முதல் குடிமை தேர்வில் 20 மதிப்பெண்களில்
தோற்றவள் அடுத்த குடிமை
தேர்வில் 1122 பேர் எழுதினார்கள் அதில் பெனோ 343 வது நபராக வந்து இந்திய
ஆட்சி பணிக்கு பெருமை சேர்க்க நின்றாள் அதையும் தன் தொழில் நுட்ப அறிவால்
வென்று காட்டினாள். இப்பொழுது இந்திய அரசின் வெளி உறவு துறை
அதிகாரி.பெற்றோர்கள் ஆனந்தத்தில்.'ஊனம் தடையில்லை
ஊன்றுகோலாய் அறிவுத் துணை இருந்தால்' என்பது தான் பெனோ நமக்கு சொல்லும் பாடம்.
2. பஸ்
சிறப்பு குழந்தைகளின் சிலர் கற்பனை செய்து கொண்டு பயணிக்கின்ற
காட்சி தான்.ஆனால் ஒரு ஸ்பீட் பிரேக் வந்த போது அவர்களின் கூர்மை அதுவே
அவர்களின் ஆளுமை.
3.ட்ரீம் ஹோம்
ஒரு கனவு வீடு ஒரு குழந்தையின் பார்வையில் விரிகிறது
அந்தக் கனவு வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் இடம் தருபவள்
தாத்தாவுக்கு தரும் இடம் சக்கர வண்டியில் இருக்கும் அவர் வீட்டின் உள்ளே
செல்ல அமைக்கும் சாய்தளம்.
4.தே ரேஸ்
ஒரு ஓட்டப்பந்தயக்களம் பத்து என்கிற எண் கொண்ட நபர்
ஓடும்போது தன் காலை இழக்கிறார் ஆனால் உடன் இவரை முந்தி ஓடுவோர் காலை இழந்து
நொண்டி நொண்டி வரும்
இவனையும் இணைத்துக் கொண்டு ஓடுவது தான் நேயம்.
5.ரீச் அவுட்
சில கார்ட்டூன் பொம்மைகள் வண்ண விளக்கை போடும் முயற்சியில் வெற்றி பெற்று தனக்கான வண்ணங்களை பெறுவது.
6.பீல் தெ மியூசிக்
குஷ்,
கிரீஸ் இருவரும் இசை பிரியர்கள் குஷ் விழி இருப்பவன், கிரிஷ் விழி
இழந்தவன்.குஷ் வாசிக்கும் ஒலி வடிவம் கேட்டு கிரிஷ் வாசிக்கிறான் அந்த இசை
கருவி அவனின் விழிக்கு ஒளியாக வருகிறது.
💥💥மாணவர்களின் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தை தூண்டும் வினாக்கள்
(இந்த
மாதத்திற்கான சிறார் திரைப்படம் ஆறு திரைபடங்களின் தொகுப்பாக இருப்பதால்
ஆசிரியர் ஏதேனும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து கீழக்காணும் வினாக்களை
கேட்கவேண்டும்)
1. கதையின் தொடக்கத்தில், இடையில் மற்றும் முடிவில் என்ன
நடக்கிறது?
2. இந்த கதை எந்த இடத்தில் நடக்கிறது?
3. இந்த கதை எங்கு நடக்கிறது என்று எப்படி அறிவது?
4. திரைப்படத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனவா?
5. இக்கதை முக்கிய கதாபாத்திரத்தை தழுவி உள்ளதா அல்லது
பிறரை சார்ந்து அமைகிறதா?
6. இத்திரைப்டத்தின் முழு கருத்தையும் மூன்று நிமிடங்களில்
உங்களால் நடித்துக் காட்ட முடியுமா?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...