Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

RTE:2010 அடிப்படையில் TNTET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பற்றி தெரியாமல் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் எதிர்கால நிலை?

 

RTE:2010 அடிப்படையில் TNTET கட்டாயம் என்ற நிபந்தனைகள் பற்றி தெரியாமல் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் எதிர்கால நிலை?


கட்டாயக் கல்வி உரிமை சட்டம் 2009 ல் இந்தியா முழுமைக்கும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் RTE சட்ட அமலாக்கம் பெற்று 23/08/2010 ல் மத்திய அரசு வெளியிட்டது.

இதனை ஒரு சில மாநிலங்கள் மட்டுமே ஆரம்பத்தில் ஏற்று   அமலாக்கங்கள் அந்தந்த மாநிலங்களில் அரசாணைகளாக வெளியிட்டன.

தமிழகத்தில்  அரசாணை  வடிவில் RTE சட்டம் நீண்ட இழுபறிக்கு பின்னர் வெளிவந்தது .

இதில் ஆசிரியர் நியமனங்கள் குறித்த விளக்கம் RTE சட்ட அமலாக்கம் மத்திய அரசு தேதியையே சாரும் என குறிப்பிடப்பட்டது.

அதாவது 23/08/2010 க்கு பிறகு பணி நியமனம் பெற்றவர்கள் மற்றும் பெறுபவர்கள் அனைவருக்கும் TNTET கட்டாயம் என்ற நிபந்தனை வட்டத்தில் கொண்டு வரப்பட்டனர்.
இந்த முழுமையான பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012 ல் வெளிவந்தது.

RTE ACT 2009 -
இதன் முழுமையான திரட்டு கூறுவது யாதெனில்....


1) ஒருவர் 23/08/2010 க்கு பிறகு புதிதாக  பட்டதாரி ஆசிரியர் பணியில் அல்லது இடைநிலை ஆசிரியர் பணியில் ( அரசு ) சேர்ந்தாலோ,


2) 23/08/2010 க்குப் பிறகு ஆசிரியர் பணியிடம் அல்லாத அரசு பணியிடத்தில் இருந்து ஆசிரியர் பணியிடத்திற்கு பதவி உயர்வு பெற்றாலோ,


 3)  23/08/2010 க்குப் பிறகு இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ ...

4) 23/08/2010 க்குப் பிறகு சத்துணவு பணியில் இருந்து பயின்று  இடைநிலை அல்லது பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்றாலோ...

5) சிறுபான்மையினர் பள்ளிகளில் 23/08/2010 க்கு பிறகு  ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் ( TET வழக்கு இன்னும் மேல்முறையீீட்டு ( Supreme Court ) வழக்கு நிலுவையில் உள்ளதால் )

குழந்தைகள் RTE ACT அடிப்படையில் அவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் TNTET கட்டாயம் எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே பணியில் தொடர முடியும் என்ற நிலை இருந்தது.
இது மேலும் நீட்டிப்பு செய்யப்பட்டு 2019 மார்ச் 31 வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டது.



RTE ACT புரிதல் இல்லாமல் கடந்த 12 வருடங்களாக தான்தோன்றித் தனமாக செயல்பட்டுவரும் கல்வித்துறை உயர் அதிகாரிகள் , ஒவ்வொரு கல்வி மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு முடிவுகள் எடுத்து ஆசிரியர் பணி நியமனங்கள், மற்றும் RTE act பற்றிய புரிதல் இல்லாமல் பதவி உயர்வு போன்ற பல்வேறுபட்ட அணுகுமுறைகளுக்கு அனுமதி அளித்துவிட்டனர்.



 இந்த நிகழ்வுகள் அதிகமாக அரசு உதவிபெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அற்ற பள்ளிகளில் அதிகம் நடைபெற்றது தற்போதுதான் தெரிய வந்துள்ளது.

RTE ACT 2009 அடிப்படையில் நடைபெற வேண்டிய முறையான ஆசிரியர் நியமனங்கள் , TET கட்டாயம் என்ற நிபந்தனைகளுடனோ  அல்லது  நிபந்தனைகள்  குறிப்பிடாமலோ பதவி உயர்வு பெற்றவர்கள் யாராயினும்  23/08/2010 க்கு  பிறகு பணி  நியமனம் அல்லது பதவி உயர்வு  பெற்று    இருப்பின்   தற்போது அறிவிக்கவுள்ள TNTET க்கு  விண்ணப்பம்  அவசியம்  செய்து தேர்ச்சி பெற முயற்சிகள்  மேற்கொண்டு  ஏற்கனவே உள்ள பணியை   தக்கவைத்துக்
கொள்ளுங்கள்.

அரசு கல்வித்துறை  உயர்  அதிகாரிகள்  மற்றும்  சம்மந்தப்பட்ட ஆசிரியர்களுக்கும்  இந்த புரிதலை முறையாக கொண்டு  சேர்க்க தமிழக அரசு  முன் வர வேண்டும்.  பணியில்  உள்ள ஆசிரியர்கள்   பணிப்  பாதுகாப்பு  சம்மந்தமான  ஒரு நல்ல தீர்வும் விரைவில் எடுக்கப்பட வேண்டும்.

அல்லது
 06/03/2012 வரையிலான பணி நியமனங்களுக்கு மத்திய அரசு CTET லிருந்து விலக்கு கொடுத்தது போலவும்,
23/08/2010க்கு  முன்பு சான்றிதழ்  சரிபார்ப்பு  உள்ளிட ஆசிரியர் பணியிட நிரப்புதல் செயல்பாடுகள் நடைபெற்று இருந்தால் மட்டுமே TNTET லிருந்து  விலக்கு அளிக்கப்பட்டுள்ளதைப் போலவும், 16/11/2012 வரை பணிநியமனம் மற்றும் இன்றுவரை பதவி உயர்வு செய்யப்பட்ட BT & SGT ( GOVT, AIDED, MINORITY SCHOOLS ) ஆசிரியர்களுக்கு TNTET லிருந்து விலக்கு அளிக்க தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive