Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் - பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் போஸ்டிங்!

 மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம்


பணியிடம் மாறுதல் செய்யப்பட்ட இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கும் மீண்டும் சென்னையில் போஸ்டிங்




பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை




மகாவிஷ்ணு சர்ச்சை விவகாரம் தொடர்பாக அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் தலைமை ஆசிரியர் தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் பென்னலூர் பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.



அதேபோன்று சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகசுந்தரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவுகள் கடந்த ஆறாம் தேதி வழங்கப்பட்டன.



இரண்டு தலைமையாசிரியர்களும் புதிய பணியிடங்களில் சேராமல் மீண்டும் சென்னையில் போஸ்டிங் வாங்குவதற்கு தீவிர முயற்சி எடுத்தனர்.




இரண்டு தலைமை ஆசிரியர்களுக்கு ஆதரவாக ஆசிரியர் இயக்கங்களும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டன.



இந்த நிலையில், இரண்டு தலைமை ஆசிரியர்களின் பணியிட மாறுதல் உத்தரவை ரத்து செய்து, மீண்டும் சென்னைக்கு பணியிடமாறுதல் வழங்கி பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.




அதன்படி தமிழரசி, விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி , அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.




சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் டேவிட் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.


சண்முகசுந்தரம், அடையார் ஊரூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive