Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

UPS - ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த தகவல்கள்

 

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் குறித்த தகவல்கள்...

ஒருமித்த ஓய்வூதியத் திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...

புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு

கடைசியாக பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாக பெறும் வகையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது மத்திய அரசு.

25 ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்,  ஓய்வு பெறுவதற்கு முன் 12 மாதங்களில் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 50% ஐ ஓய்வூதியமாகப் பெற முடியும்

ஓய்வூதியம் பெறும் ஊழியர் இறந்துவிட்டால், அவர் பெற்ற ஓய்வூதியத்தில் 60% அவரது குடும்பத்திற்கு, குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும்.

இந்த புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் 2025 ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு..

50% ஓய்வூதியத்தை உறுதி செய்தது மத்திய அரசு...

ஒருமித்த ஓய்வூதிய திட்டம்' என்ற புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்...

25 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் இருந்து 50% மாத ஓய்வூதியமாக வழங்கிடும் வகையில் மத்திய அரசு புதிய திட்டத்திற்கு ஒப்புதல்...

புதுடில்லி: மத்திய அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ‛‛ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்திற்கு'' மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங், நிர்மலா சீத்தாராமன், நட்டா, அஷ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியது, ஒருங்கிணைந்த ஒய்வூதியத் திட்டம் கொண்டு வர அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய ஒய்வூதியத் திட்டத்தின்படி மத்திய அரசு ஊழியர்கள் ஒய்வுக்கு முன்பாக சிறு தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

மத்திய அரசு ஊழியர்கள் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் பணியை முடித்திருந்தால், ஓய்வு பெறுவதற்கு முந்தைய கடந்த 12 மாதங்களில் பெறப்பட்ட அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகப் பெற்றுக்கொள்ளலாம். பணியின் போது மத்திய அரசு ஊழியர்கள் இறந்து விட்டால், குடும்ப ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் 60 சதவீத ஒய்வூதிய பலனை அடைய முடியும். இதன் மூலம் 23 லட்சம் ஒய்வூதியர்கள் பலனடைவர்.

தற்போதைய ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் 10 சதவீத பங்களிப்பையும், மத்திய அரசு 14 சதவீத பங்களிப்பையும் வழங்குகிறது. புதிய ஒய்வூதிட்டத்தின் கீழ் மத்திய அரசு பங்களிப்பு 18 சதவீதமாக உயர்த்தப்படும் . இத்திட்டம் 2025 ம் ஆண்டு ஏப்ரல் 01ஆம் தேதிமுதல் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive