சென்னை விருகம்பாக்கம் AKR மஹாலில் வரலாற்று சிறப்புமிக்க நாணய கண்காட்சி நாளை காலை 10 மணி முதல் தொடங்குகிறது. இந்த மாபெரும் தேசிய அளவிலான கண்காட்சியில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால தமிழ் மன்னர்களின் நாணயங்கள், தபால் தலைகள், பணத்தால்கள் மற்றும் கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. பள்ளி கல்லூரி மாணவர்கள், வரலாற்று அறிஞர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கிறார்கள். மேலும் இந்தியா முழுவதும் உள்ள நாணய சேகரிப்பாளர்கள் தங்கள் நாணயங்களை காட்சிப்படுத்த உள்ளனர். தமிழ் மக்களின் மரபு, கலாச்சாரம், பண்பாடு மற்றும் தொல் தமிழர்களின் வாழ்வியலை பிரதானப்படுத்தும் சிறப்பு மிக்க கண்காட்சிக்கு அனுமதி இலவசம். நாளை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள் நடைபெறும் என சென்னை நாணயவியல் அமைப்பின் தலைவர் சென்னை மணிகண்டன் விளக்கினார்.
Padasalai Guides - Public Exam Question Bank - Sales
Public Exam 2025
Latest Updates
Home »
Padasalai Today News
» சென்னையில் வரலாற்று சிறப்புமிக்க நாணய கண்காட்சி நாளை தொடங்குகிறது!
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...