Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.2024

 

  

வாரன் பஃபெட்





திருக்குறள்: 

பால்: பொருட்பால்

அதிகாரம்: இடுக்கண் அழியாமை

குறள் எண்:623 

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர்.

பொருள் :துன்பம் வந்தபோது அதற்காக வருந்திக் கலங்காதவர் அந்த் துன்பத்திற்கே துன்பம் உண்டாக்கி அதை வென்று விடுவர்.

பழமொழி :

A tree is known by its fruit. 

 நல்லார் பொல்லாரை செய்கையால் அறியலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :  

*கல்வி அறிவோடு கலைத்திறனும் மேம்பட எம் பள்ளியில் நடைபெறும் கலைத்திருவிழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன். 

 * எனது பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும் ,பெற்றோர்களுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் நல்ல மாணவனாக நடந்து கொள்வேன்.

பொன்மொழி :

வெற்றி என்பது சிறிய முயற்சிகளின் கூட்டுத்தொகையாகும், நாள்தோறும் மீண்டும் மீண்டும்." - ராபர்ட் கோலியர்

பொது அறிவு : 

1. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது


விடை: சோடியம் ஹைட்ராக்சைடு

2. இந்து என்னும் ஆங்கில நாளிதழைத் தோற்றுவித்தவர்

விடை: ஜி.சுப்பிரமணியம்

English words & meanings :

 swift-விரைவான,

 brisk-விறுவிறுப்பான

வேளாண்மையும் வாழ்வும் : 

அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.

ஆகஸ்ட் 30

வாரன் எட்வர்ட் பஃபெட் அவர்களின் பிறந்தநாள் 

வாரன் எட்வர்ட் பஃபெட் (Warren Edward Buffett, பிறப்பு: ஆகஸ்ட் 301930ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டாளரும், தொழிலதிபரும், பொதுக் கொடையாளரும் ஆவார். உலகிலேயே மிகவும் வெற்றிகரமான முதலீட்டாளர்களில் ஒருவரான இவர் "பெர்க்சயர் ஹாதவே"[4] என்ற நிறுவனத்தில் அதிகமான பங்குகளைக் கொண்டுள்ளதோடு அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். அவருடைய சொத்தின் மொத்த மதிப்பு $62 பில்லியன் எனக் கணக்கிடப்பட்டுள்ளது

நீதிக்கதை

 செய்த தவறு  


ஒரு ஊரில் மன்னர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு வேட்டையாடுவதில் அதிக இன்பம். அவர் தமது ஆயுதங்களுடன் காட்டில் கொடிய மிருகங்களை வேட்டையாடி விட்டு நகருக்கு எல்லையில் உள்ள கோயில் மரத்தின் நிழலில் சிறிது நேரம் ஓய்வாக உறங்கிக் கொண்டிருந்தார்.


திடீரென்று எங்கிருந்தோ ஒரு கல் வந்து மன்னரை காயப்படுத்தி, அவர் தூக்கத்தை கலைத்தது. சுற்றி இருந்த காவலர்கள் நாலா பக்கமும் சென்று, ஒரு நடுத்தர வயது பெண்ணை பிடித்து, அழைத்து வந்து மன்னர் முன் நிறுத்தினார்கள். 


மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “ஏனம்மா என் மீது கல்லை எறிந்தாய்?” என்றார். 


அதற்கு அந்த பெண் அரசரை பார்த்து, “மன்னர் பெருமகனே, நான் காட்டில் விறகு வெட்டியும், அவைகளை பொறுக்கியும், நாட்டில் விலைக்கு விற்று அதில் கிடைக்கும் வருமானத்தில் என் குழந்தைகளுக்கு உணவு அளிக்கிறேன்.


வரும் வழியில் மரத்தில் பழங்கள் இருப்பதை பார்த்தேன். என் குழந்தைகளின் நினைவு வந்தது. பிள்ளைகளின் பசியை போக்குவது பெற்றவள் கடமை அல்லவா?. 


அந்த பழங்களை பறிப்பதற்காக ஒரு கல்லை எடுத்து மரத்தில் எறிந்தேன். தாங்கள் மர நிழலில் உறங்கிக் கொண்டிருந்தது தூரத்தில் இருந்து எனக்கு தெரியவில்லை.


நான்  எறிந்த அந்த கல்லானது உங்கள் மீது பட்டு உங்கள் தூக்கத்தை கலைத்ததுடன், உங்களையும் காயப்படுத்தி விட்டது. இந்த தவறுக்கு நான் தான் காரணம் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்” என்று வேண்டி நின்றாள்.


மன்னர் அந்த பெண்மணியை பார்த்து, “பெண்ணே, நீ செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கின்றாய். அது உன் சிறந்த பண்பு. உன்னை மன்னித்து விட்டேன்”, என்று கூறியதோட அப்பெண்ணுக்கு இரண்டு பசுக்களையும், கை செலவுக்கு பணத்தையும் கொடுக்க ஆணையிட்டார்.


சுற்றி இருந்த காவலர்கள் மன்னரை நோக்கி, “அரசே, தங்களை கல்லால் அடித்தவளை மன்னித்ததுடன் அவளுக்கு பரிசும் தருகிறீர்கள் இச்செயல் எங்களுக்கு வியப்பு அளிக்கிறது” என்றனர். 


காவலர்களை பார்த்து மன்னர், “காவலர்களே, அவள் வேண்டுமென்று என்னை கல்லால் அடிக்கவில்லை.

பழங்களை உதிர்க்கவே கல்லால் அடித்தால் அது தவறுதலாக என் மீது பட்டு என்னை காயப்படுத்தியது. அவள் தான் செய்த தவறுக்கு வருந்தி என்னிடம் மன்னிப்பு கேட்டாள். 


அது மட்டுமல்ல அவள் தன் பிள்ளைகளின் பசியை போக்கவே மரத்தின் மீது கல் எறிந்தாள். அது தாயாகிய அவள் கடமை அல்லவா?. அவள் அவளுடைய பிள்ளைகளுக்காக அவ்வாறு செய்தாள். 


நான் என் குடிமக்களுக்காக  பரிசு வழங்கினேன்” என்றார். காவலர்கள் மன்னரின் விளக்கம் கேட்டு பெரு மகிழ்ச்சி அடைந்தனர். 


நீதி : செய்த தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்பது சிறந்த குணமாகும்.

இன்றைய செய்திகள்

30.08.2024

அனைத்து கட்டண உயர்வும் வாபஸ்: பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவு.

பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 3,000 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2025 ஜனவரி மாதம் வரை ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் வரும் ஆகஸ்ட்-31 முதல் செப்டம்பர்-1-ம் 
தேதி வரை ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெறவுள்ளது. 

ரூ.873 கோடி மதிப்புக்கு 73,000 துப்பாக்கிகள் வாங்க அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம்: பாதுகாப்பு துறை தகவல்.

குஜராத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது.

டெலிகிராம் சிஇஓ பவெல் துரோவ் பல்வேறு குற்றஞ் சாட்டு காரணமாக பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற தடை.

இங்கிலாந்து வீரர் டிவைன் ஐஹேம் 100மீ ஓட்டப்பந்தய தூரத்தை 10.30 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார்.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு.

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்.

Today's Headlines

Potential fee hikes for engineering colleges have been rolled back by Anna University

A government order has been issued to pay the salaries of 3,000 temporary postgraduate teachers working in the school education department until January 2025."



The Formula 4 street race will be held in Chennai from August 31 to September 1, 2024. 

 India signs a deal with US to buy 73,000 guns worth Rs 873 crore: Ministry of Defense Information

 As heavy rain continues in Gujarat, the death toll has increased to 28 in the last 4 days.

 Pavel Durov, the CEO of Telegram, has been banned from leaving France due to multiple charges against him

 England's Dwayne Ihem has set a world record for 100m in 10.30 seconds.

 Indian Team was Announced for Asia Champions  Hockey Series

 US Open Tennis: Serbian Djokovic advances to 3rd round
 Prepared by

Covai women ICT_போதிமரம்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive