Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Budget 2024 - அரசு ஊழியர்களுக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் முக்கிய அறிவிப்பு?

104

அரசு ஊழியர்களுக்கு உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு ஊழியர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் 2003-ம் ஆண்டு வரை அமலில் இருந்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் பணிஓய்வு பெற்ற பிறகு, அவர்கள் கடைசியாகப் பெற்ற சம்பளத்தில் 50% தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது.

சமீபத்திய தகவல்களின்படி, தேசிய ஓய்வூதிய அமைப்பில் மத்திய அரசு ஊழியர்களுக்கு தாங்கள் வாங்கிய கடைசி சம்பளத்தில் இருந்து 50 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஓய்வூதிய கொடுப்பனவுகளில் உள்ள முரண்பாடுகள் குறித்த கவலைகளை நிவர்த்தி செய்ய அரசு இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

2004-ம் ஆண்டு முதல் பழைய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, என்.பி.எஸ் (NPS) எனப்படும் தேசிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவொரு பங்களிப்புத் திட்டம் ஆகும்.

இதற்காக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதிச் செயலர் டி.வி. சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும். பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) திரும்பப் போவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பழைய திட்டம் ஊழியர்களுக்கு அவர்களின் இறுதி சம்பளத்தில் பாதிக்கு இணையான ஓய்வூதியத்தை உத்தரவாதப்படுத்தியது, ஊதிய கமிஷன் பரிந்துரைகளின் அடிப்படையில் பணவீக்கத்திற்கு ஏற்ப அது சரிசெய்யப்பட்டது. ஆனால், அந்த திட்டத்தை அரசு முன்னர் ரத்து செய்தது. மாறாக தேசிய ஓய்வூதிய முறையை (NPS) தொடர்கிறது.

அரசு ஊழியர், அரசு என இரு தரப்பில் இருந்தும் ஓய்வூதிய நிதிக்குப் பங்களிப்பு செலுத்தப்படும். இந்தத் திட்டத்தில் எந்தவோர் உத்தரவாதமும் இல்லை. மேலும், பங்குச் சந்தை ஏற்ற இறக்கங்களின் பாதிப்பும் என்.பி.எஸ் நிதியில் இருப்பதாக அரசு ஊழியர்கள் கருதுகிறார்கள்.

ஆனால், நீண்ட கால அடிப்படையில் தேசிய ஓய்வூதியத் திட்டம் அரசு ஊழியர்களுக்கு நல்ல வருமானம் கொடுத்துள்ளது. ஆனாலும், இந்தத் திட்டத்தில் ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் இல்லை என்பதே அரசு ஊழியர்கள் தெரிவிக்கும் மிகப் பெரிய குறையாக உள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவர வாய்ப்பில்லை என மத்திய அரசு பலமுறை கூறிவிட்டது.

எனினும், ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவருவோம் எனச் சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிப்பதால், இது ஓர் அரசியல் சிக்கலாக மாறிவிட்டது. தவிர, சில மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டும் உள்ளது.

எனவே, ஓய்வூதியத் திட்டம் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகளை வழங்கும்படி நிதித்துறை செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் நிதி அமைச்சகம் ஒரு குழுவை அமைத்தது.

புதிய NPS திட்டத்தில், ஊழியர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 10% பங்களிப்பார்கள் மற்றும் அரசாங்கத்தின் பங்களிப்பு 14% ஆகும். அதாவது, ஓய்வூதியத் தொகையானது, உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிலையான தொகை அல்ல, பணியாளர்கள் செய்த மொத்த பங்களிப்புகளைப் பொறுத்தது. NPS என்பது எந்த உத்தரவாதமும் இல்லாத சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமாகும். மத்திய அரசு 40-45% உத்தரவாதத்தை வழங்க முடியும் ஆனால் இந்த உத்தரவாதம் பல ஆண்டுகளாக சேவையில் இருக்கும் ஊழியர்களின் பிரச்னைகளை முழுமையாக தீர்க்காது. ஆக, இந்தாண்டு முழு பட்ஜெட்டில் ஓய்வூதியம் குறித்த முடிவு அறிவிக்கப்படும்.

25-30 ஆண்டுகளாக தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் முதலீடு செய்துள்ள ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் (OPS) ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இணையான வருமானத்தைப் பெறுகிறார்கள் என்று அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இத்திட்டத்தில் இருந்து 20 ஆண்டுகள் முடிவதற்குள் வெளியே வருபவர்களுக்கு குறைந்த ஓய்வூதியம் கிடைப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

சோமநாதன் கமிட்டி பிற மாநிலங்கள் பின்பற்றும் ஓய்வூதியக் கொள்கைகளின் அடிப்படையில் ஓய்வூதியத் திட்டத்தில் மாற்றங்களைப் பரிந்துரைத்தது. குழு அறிக்கையின்படி, 25-30 ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களின் கடைசி சம்பளத்தில் 50% ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்யலாம். ஓய்வுபெற்ற ஊழியர்களுக்குப் போதுமான தொகையை வழங்குவதற்கு அரசு சிறப்பு நிதியத்தை உருவாக்கவும் குழு பரிந்துரைத்தது. இந்த முன்மொழிவு குறித்து தற்போது விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

2024 ஜனவரி 11 அன்று, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீட்டெடுப்பதற்கான கூட்டு மன்றத்தின் குழு (NJCA) நிதி அமைச்சகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது. நிலையான ஓய்வூதியத் தொகைக்கு உத்தரவாதம் அளிக்கும் பழைய ஓய்வூதிய முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழு உலக நாடுகளில் உள்ள ஓய்வூதியத் திட்டங்கள், ஆந்திர மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள உத்தரவாத ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதை அடுத்து, அரசு ஊழியர்களுக்கு 40% முதல் 45% வரை ஓய்வூதியத்துக்கு உத்தரவாதம் அளிக்கலாம் என நிதி அமைச்சகத்துக்கு சோமநாதன் குழு பரிந்துரை வழங்கலாம் எனப் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து வரும் மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இந்திய அரசிடம் தற்போது பென்ஷன் ஃபண்ட் எதுவும் இல்லாத நிலையில், புதிதாக பென்ஷன் ஃபண்ட் உருவாக்குவதற்கான அறிவிப்பையும் பட்ஜெட்டில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive