Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நன்றி அறிவிப்பு & கோரிக்கை மாநாடு! - TAMS


திருப்பத்தூர் மாவட்ட
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க கூட்டம்
      நன்றி அறிவிப்பு மாநாடு கோரிக்கை மாநாடு அனைவரும் வாரீர்!

திருப்பத்தூர், ஐன-3
      திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூரில் அரசு பூங்கா உயர்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு மற்றும் சென்னையில் நடைபெறக்கூடிய நன்றி அறிவிப்பு மாநாட்டிற்கு ஆயத்தப்படுத்தும் விதமாகவும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் மு சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது மாவட்ட பொருளாளர் M.சிவக்குமார் முன்னிலை வகித்தார்

            தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் கு.தியாகராஜன் அவர்கள் தொடக்கக் கல்வித் துறையில் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான மூதூரிமை கடைபிடிக்கப்படும் என அறிவித்துள்ளமைக்கு, தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கும், உயர் கல்வி அலுவலருக்கும் நன்றி தெரிவிக்கும் மாநாடாக சென்னை, ராயப்பேட்டை YMCA மைதானத்தில் பிப்ரவரி 04-02-2024 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெறுகிறது.

          நன்றி அறிவிப்பு மாநாட்டின் முதல் நிகழ்வாக "கல்வியில் கலைஞர்" என்ற தலைப்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவும், கவிதை நூல் வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. இம் மாநாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் சுமார் 300 பேர் கலந்து கொள்வது என இக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

       மாநாட்டில் முன்வைக்கப்பட உள்ள கோரிக்கைகளான புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். G.o.243 ல் பதிவு உயர்வுக்கு தகுதியுள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் இல்லாத பட்சத்தில் இடைநிலை ஆசிரியர் பட்டதாரி பதவி உயர்வு பெறும் வகையில் ஆணையை திருத்தம் மேற்கொள்ள வலியுறுத்தல், 2004 முதல் 2006 வரை தொகுப்பு ஊதிய காலத்தை பணிக்காலமாக மாற்றுதல், பழைய முறைப்படி ஊக்க ஊதிய உயர்வு, சரண்டர் வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித்துறை உள்ளதுபோல் தொடக்க கல்வி துறையில் பள்ளி துணை ஆய்வாளர் பணியிடம் உருவாக்குதல், ஈட்டிய விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டு மாநாடு நடைபெறுகின்றது

    மாவட்ட செயற்குழு மற்றும் நன்றி அறிவிப்பு மாநாடு ஆயத்த கூட்டத்தில் பொறுப்பாளர்கள் M.ஸ்ரீதரன், M.கிருஷ்ணன், V.R.சண்முகம், M.மாதவன் புருஷோத்தமன், M.செல்வகுமார், S.செந்தில்குமார், P.சுப்பிரமணி உள்ளிட்ட மாநில மாவட்ட ,ஒன்றிய உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோரிக்கையை வென்றெடுக்கும் மாநாடாக மாற்றுவோம். அனைத்து ஆசிரிய பேரினமே அலைகடலென திரண்டு வாரீர்!

அன்படன்
மு.சிவக்குமார் மாவட்டத் தலைவர் 
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம், திருப்பத்தூர் மாவட்டம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive