தன்னார்வலர்கள் தேர்வு :
மாநில
அளவில் வெப் போர்டல் மூலம் பதிவு செய்த தன் னார்வலர்களின் தகவல்கள் மாவட்ட
வாரியாக பிரிக்கப்பட்டு மாவட்ட குழு உறுப்பினர் செயலருக்கு அனுப்பப்பட்டது
. தன் னார்வலராக வர விரும்புவோர் 18 வயது பூர்த்தி அடைந்தவ ராகவும் ,
இல்லம் தேடிக் கல்வி மையம் உள்ள குடியிருப்பு பகுதியை சேர்ந்தவராகவும்
இருக்க வேண்டும் . 1-5ம் வகுப்பு வரை மாணவர் குழுவுக்கு 12 ம் வகுப்பும் ,
6-8ம் வகுப்பு வரை மாணவர் குழுவுக்கு இளங்கலை பட்டமும் படித்திருக்க வேண்
டும் , பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது . தன்னார்வ லர்கள்
தொடர்ச்சியாக வாரத்திற்கு , குறைந்தது 6 மணி நேரம் குழந்தைகளுடன் இருக்க
வேண்டும் . கண்டிப்பாக , தமிழ் தெரிந்திருக்க வேண்டும் . தமிழ் , ஆங்கிலம் ,
கணிதம் கற்றுத்தர வேண்டும் . நிபந்தனைபடி தன்னார்வலர்களை பதிவு செய்ய
வலியுறுத்தப்பட்டிருந்தது . இதன்படி மாதம் 31000 சம்பளம் வழங்கப்படும்
என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது . இந்நி லையில் 2 லட்சம்
தன்னார்வலர்கள் இதில் பணிபுரிந்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...