Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

திமுக வாக்குறுதி 181 படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் - பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிக்கை

 

 பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் திமுக வாக்குறுதி 181 படி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் 2012 ஆம் ஆண்டு 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.

இதில் மரணம், ஓய்வு என 4 ஆயிரம் காலியிடங்கள் ஆகிவிட்டது.

இதனால் 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.

கடைசியாக 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 10 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டது.

இதன் பின்னர் சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது.

திமுக ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டு முடிய போகிறது.

சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கோரிக்கையை முதல்வர் நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறது.

பகுதிநேர ஆசிரியர்கள் சார்பிலும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஆயிரக்கணக்கில் கோரிக்கை மனுக்களும் கொடுக்கப்பட்டது.

ஆனாலும் முதல்வர் ஸ்டாலின் இதுவரை பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை.

பள்ளிக்கல்வி அமைச்சர் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ந்தேதி போராட்டத்தை கைவிடுமாறு இரண்டு அறிவிப்பை வெளியிட்டார்.

அதில் சம்பள உயர்வு 2500 ரூபாய் மட்டும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்க ஆணையை வெளியிடவில்லை.

முதல்வரின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை.

பள்ளிக்கல்வி அமைச்சர் அறிவிப்பும் முழுவதும் செயல்படுத்தவில்லை.

இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

2500 ரூபாய் சம்பள உயர்வு அறிவித்த போதாவது மே மாதம் சம்பளமும் இனி உண்டு என அறிவித்து இருந்தால் மகிழ்ச்சி அடைந்து இருப்போம்.

அறிவித்த சம்பள உயர்வோடு ஆண்டில் 11 மாதங்களுக்கு வழங்கும் சம்பளத்தை கணக்கிட்டு 12 மாதங்களுக்கும் வழங்க முடியும்.

மே மாதம் சம்பளம் இல்லாமல் எப்படி குடும்பம் நடத்துவது என்பதை நினைத்து பார்த்து இதற்கு இன்னொரு ஆணை வெளியிட வேண்டும்.

அனைத்து நாட்களும், முழுநேரமும் வேலை செய்யுமாறு தற்போதுள்ள பகுதிநேர வேலையை மாற்ற வேண்டும்.

12 ஆண்டாக செய்து வரும் இந்த வேலையை முறைப்படுத்தி பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

நிதி நிலையை காரணம் காட்டி பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வதை இனியும் தாமதிக்க வேண்டாம்.

புதிய சம்பளம் 12500 வழங்க ஆண்டின் 11 மாதங்களுக்கு 170 கோடி செலவாகும்.

இதை காலமுறை சம்பளம் 30 ஆயிரமாக வழங்க மேலும் 270 கோடி ஆண்டுக்கு தேவைப்படும்.

இதை கல்வி வளர்ச்சிக்கும், ஆசிரியர்கள் குடும்ப நலனுக்காகவும் முதல்வர் மனிதாபிமானம் கொண்டு இந்த சட்டசபை கூட்டதொடரில்  பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

*************************
S.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்

பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல்: 9487257203




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive