Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு திறனறி தேர்வு நாளை தொடங்குகிறது

1139327

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான திறனறித் தேர்வு நாளை (அக்.17) தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது.


இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் மேம்படுத்தும் நோக்கத்தில் மாநில மதிப்பீட்டுப் புலம் பெயரில் திறனறி தேர்வுகள் பள்ளிக்கல்வித் துறை சார்பில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகின்றன.


அதன்படி நடப்பாண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகள் நடத்தப்பட்டன.


அதைத் தொடர்ந்து மாணவர்களுக்கு நாளை (அக்டோபர் 17) முதல் 20-ம் தேதி வரை கற்றல் விளைவு, திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வுகளை நடத்த வேண்டும். இந்த தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் https://exam.tnschools.gov.in/ எனும் மாநில மதிப்பீட்டு புலம் இணையதளத்தில் முன்கூட்டியே பதிவேற்றப்படும். தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒருநாள் முன்பாக மதியம் 2 முதல் அடுத்த 23 மணி நேரத்துக்குள் அந்த வினாத்தாள்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive