![Screenshot_2023-08-15-21-37-31-48_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f Screenshot_2023-08-15-21-37-31-48_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiG9XVNHsEnUHVEwHtIUDatlpkXHSTS8QwjPwFZitVaJlnVWFxLu6wFC-B7sk3CBTBXph94Uz7lteqK9tajTatS_XATV9mQphD-ZQfaKYNMrvie8JRvJ0SeW0kBX89t4WB-p9ykjlRDxu3G0IJB-sWzz-X3wbXWxGCsYtPnWUQnJKJpoTuzlTeR6Mbu4REo/w270-h400/Screenshot_2023-08-15-21-37-31-48_e2d5b3f32b79de1d45acd1fad96fbb0f.jpg)
மாண்புமிகு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் , தமிழ்நாட்டில் நகர்புறப் பகுதிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசுப் பள்ளிகளில் பயிலும் தொடக்கப் பள்ளி மாணவ , மாணவியருக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அத்திட்டம் நாகை மாவட்டம் , திருக்குவளையில் 25.08.2023 அன்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் துவக்கப்படுகிறது. அதே நாளில் அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் சார்ந்து , சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பார்வை ( 2 ) ல் காணும் கடிதம் மூலம் ஆயத்த பணிகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே மாவட்ட ஆட்சியரின் அறிவுரையினை பெற்று அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக் கல்வி ) தங்கள் மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் அத்திட்டத்தினை மேற்கொள்ள செயல்படுத்திட தக்க நடவடிக்கை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...