![IMG_20230711_202726 IMG_20230711_202726](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh3QZrmvIW3SQNWH9yoQo9Or_XVrOjPP31X3LDhOzSyOASagf5A_4ak8U5YhUvPiEA372R3f0RaMdtpbIm2kZqlk4Bcz9VxbzBpw-8Rmdt3hppx9rmnR4Lxww8HxY-5SZbkUxQha91JQ1Zr6JK8ByfNkIk0Ug1Si7mETVVIx5F96KuChq-3QFMVmPBGcUY1/s320/IMG_20230711_202726.jpg)
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை / பட்டதாரி / முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் அவரவர்களின் விருப்பம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக அலகுவிட்டு அலகு / துறை மாறுதல் மூலம் தொடக்கக் கல்வி துறை , மாநகரட்சி , கள்ளர் சீரமைப்புத் துறை , ஆதிதிராவிட நலத் துறை மற்றும் இதரத் துறைகளின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல அத்துறையின் ( ப.க.து ) தலைவரால் ( இயக்குநர் ) உரிய தடையின்மைச் சான்று பெறுதல் அவசியமாகிறது.
மேற்படி அலகுவிட்டு அலகு / துறை மாறுதலில் செல்வதற்கு தடையின்மைச் சான்று ( Noc ) கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்களிடமிருந்து கீழ்க்காணும் ஆவணகளை கருத்துருவில் இணைத்து சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்கள் பரிந்துரைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...