![Tamil_News_large_3320875 Tamil_News_large_3320875](https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_3320875.jpg)
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு எப்போது வெளியாகும் என்பதில் குழப்பம் நிலவுவதால், மாணவர்,பெற்றோர் முடிவெடுக்க முடியாமல் உள்ளனர்.
தமிழகத்தில், ஏப்., 6 முதல், 20ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது;9 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வெழுதினர்.
விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 24ல் துவங்கி, மே முதல் வாரம் வரை நடந்தது. நாளை மறுநாள், மே 17ல் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுத்துறை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
இதனால், 10ம் வகுப்பு தேர்வு முடிவு 17ல் வெளியாகுமா அல்லது 19ல்வெளியாகுமா என்ற குழப்பம் எழுந்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...