Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்: போலீசார் தடியடி

அரியானாவில் பழைய ஓய்வூதிய திட்டம் கேட்டு அரசு ஊழியர்கள் போராட்டம்: போலீசார் தடியடி!..

அரியானா அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருமாறு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்காக பஞ்ச்குலா-சண்டிகார் எல்லையில் குழுமிய அவர்கள், பின்னர் அங்கிருந்து முதல்-மந்திரி வீட்டை முற்றுகையிடுவதற்காக பேரணியாக செல்ல முயன்றனர்.

உடனே போலீசார் அவர்களை தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் கலைக்க முயன்றனர். இதில் சில ஊழியர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதேநேரம் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்படும் எனவும் வாக்குறுதி அளித்து உள்ளது.

இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாநில அரசு அழைப்பு விடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.








0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive