![IMG_20220904_105314 IMG_20220904_105314](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1lCVm0Ey5t7enbVN6Juxaw3F9FxXN0nAFIcgtcVqCThf8ux4QRZdsLHT5VjpP5e6n3jG91c5Y1kZ8DhTbJrAxj0K6wCpBwKsJ1dqC3NohMRNdDAE8HOkoiGNbd03XpyyAAArk96wF6chPQ9aLUo3GkEFruO0Smuk6awmbR_ZODcnmKWT5CgEjQqMVUg/w295-h400/IMG_20220904_105314.jpg)
தூத்துக்குடி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்த அந்தோ ணிசாமி , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் , சிதம்பராபுரம் ஆர்.சி. பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுகிறேன் . பல ஆண்டு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த பலன்களும் வழங்கப்படவில்லை . இவற்றை வழங் கும்படி மாவட்ட கல்வி நிர்வாகத்திற்கு மனு அனுப்பி னேன் . எனது கோரிக்கையை சங்கரன்கோவில் மாவட்ட கல்வி அலுவலர் நிராகரித்தார் .
ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தை காட்டி , உரிய பலன்களை
மறுத்துள்ளனர் . இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய உயர்வுக்கு ஆசிரியர்
தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற அவசியம் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே
உத்தரவிட்டுள்ளது .
அதன்
படி கல்வி அதிகாரிகளின் உத்தரவை ரத்து செய்து , எனக் கான ஆண்டு ஊதிய
உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில்
கூறியிருந்தார் . இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார் .
முடிவில் , மனுதாரருக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட பலன்களை வழங்க மறுத்த மாவட்ட கல்வி அதிகாரியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது .
மனுதாரருக்கு
கடந்த 2012 - ம் ஆண்டில் இருந்து உரிய பலன்களை வழங்குவது குறித்து
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 8 வாரத்தில் உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்
என்று நீதிபதி உத்தர விட்டார் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...