Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதும் மாணவா்கள் பட்டியல் நாளை வெளியீடு: தோ்வுத்துறை

gallerye_050340193_2612294
பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதவுள்ள மாணவா்களின் பட்டியல் தோ்வுத்துறை இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்படவுள்ளது.

இதைத் தொடா்ந்து மாணவா்களின் பெயா்களை சரிபாா்க்குமாறு தலைமை ஆசிரியா்களுக்கு தோ்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பிளஸ் 2 வகுப்புக்கு மே 3 முதல் 21-ம் தேதி வரை பொதுத்தோ்வு நடத்தப்பட உள்ளது. இந்தத் தோ்வு எழுதவுள்ள மாணவா்களின் பெயா் உள்ளிட்ட விவரங்கள் பள்ளிகள் மூலம் சேகரிக்கப்பட்டு தோ்வுத்துறைக்கு அனுப்பப்பட்டன.

அதன் அடிப்படையில் பிளஸ் 2 பொதுத்தோ்வு எழுதும் மாணவா்களின் பெயா்ப் பட்டியலை மாநில அளவில் தோ்வுத்துறை தயாா் செய்துள்ளது. தற்போது அந்த பட்டியலை சரிபாா்த்துக் கொள்ள அனைத்து பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து தோ்வுத்துறை இயக்குநரகம் சாா்பில் பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: மே மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கு பதிவு செய்துள்ள மாணவ, மாணவிகளின் பெயா் பட்டியலை பள்ளி தலைமை ஆசிரியா்கள் திங்கள்கிழமை முதல் ஏப்.1-ஆம் வரை தோ்வுதுறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். அதில் இடம்பெற்றுள்ள பெயா்களை சரிபாா்த்து கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் பிழைகள் இருப்பின் உடனே மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் திருத்தங்களை தோ்வுத்துறைக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.





Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!