Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழகத்தில் நேரடியாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு இனசுழற்சி உள் ஒதுக்கீடு முறை செல்லாது

தமிழகத்தில் நேரடியாக நியமிக்கப்படும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு இனசுழற்சி, உள்ஒதுக்கீடு முறை செல்லாது: சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை 4 வாரங்களில் அமல்படுத்த உச்ச நீதிமன்றம் கெடு


டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி நேரடி நியமனங்கள் மூலம் நியமிக்கப்படும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு இனசுழற்சி, உள்ஒதுக்கீடு முறை செல்லாது. மதிப்பெண் ரேங்க் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை 4 வாரங்களில் அமல்படுத்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் 69 சதவீத இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. இவ்வாறுடிஎன்பிஎஸ்சி, டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிக்க இடஒதுக்கீடு, இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை அரசு 2003 முதல் கடைபிடிக்கிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive