![Screenshot_20210220_080234 Screenshot_20210220_080234](https://1.bp.blogspot.com/-WP-Z2GXo7Fk/YDB1BO3urfI/AAAAAAAA0pw/TV9ZD0sdxOw6HPqViK3wOPjfA2XwUtxEgCLcBGAsYHQ/s320/Screenshot_20210220_080234.jpg)
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக, காவல் துறை, சிறை மற்றும் தீயணைப்புத் துறைக்கு, இரண்டாம் நிலை காவலர்களாக, 11 ஆயிரத்து, 741 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கான எழுத்து தேர்வு, 2020 டிச., 13ல் நடந்தது. இதில், 5 லட்சத்து, 50 ஆயிரத்து, 314 பேர் பங்கேற்றனர்.
இத்தேர்வின் முடிவு, சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின், www.tnusrbonline.org என்ற, இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்டது.தேர்ச்சி பெற்றவர்களுக்கு, உடல் தகுதி தேர்வு விரைவில் நடக்க உள்ளது. அதற்கான அழைப்புக் கடிதம் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்படும். அவற்றை சீருடை பணியாளர் தேர்வு குழும இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...