Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்களை மட்டும் அனுமதிக்க முடிவு

கரோனா அச்சம்: ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்களை மட்டும் அனுமதிக்க முடிவு- பட்டியல் தயாரிப்புப் பணி தீவிரம்
ருக்கும் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்துள்ளனர்.

கரோனா பரவல் அச்சம் காரணமாக, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்களை மட்டும் அனுமதிக்கத் தேர்தல் பிரிவினர் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளைத் தேர்தல் ஆணையத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர். முன்னரே உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பழுது நீக்கி, தயார்படுத்தி வைப்பதோடு, கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை, வெளி மாநிலங்களில் இருந்து வரவழைத்துத் தயார் நிலையில் வைக்கும் பணி, அந்தந்த மாவட்டத் தேர்தல் பிரிவு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸ் பரவலின் தாக்கத்தை முற்றிலும் கட்டுப்படுத்த, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களுக்குக் கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. எனவே, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி வரும் சட்டப்பேரவைத் தேர்தல், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி நடத்தப்பட உள்ளது. இதற்கேற்ப வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட உள்ளது.

ஒரு மையத்துக்கு ஆயிரம் பேர்

தற்போது கரோனா அச்சம் காரணமாக, ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். மீதமுள்ளவர்கள் அதே வாக்குச் சாவடி வளாகத்தில் உள்ள வேறு வாக்குச்சாவடியில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்படும். இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடி வளாகத்திலும் 3 முதல் 4 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு ஆயிரம் வாக்காளர்கள் என்ற அடிப்படையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, மாவட்டத்தில் கூடுதலாக 400 முதல் 500 வாக்குச்சாவடிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளன'' என்றார்.






0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive