![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEisggyOH_NDlYofeN_pIxhXkJAUdc0hOEpmRMY6U5SGv-H_WVnoOaACcQiNKxnRwYENvZV9RZ-f_bv4K-cYCK5JGrrfA1yoaBIx6l3lTSMJbKSdKZfvCqvinSVYzCA2QmtUwUZZyfa_O7o/s320/school-masks-edited-696x392.jpg)
நவ.17ந் தேதி முதல் கர்நாடகாவில் மீண்டும் கல்லூரிகள் திறப்பு : மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் - கர்நாடகா அரசு.
கர்நாடகாவில் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் கொரோனா நெகடிவ் சான்று கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கை தொடர்ந்து 8 மாதங்களுக்குப் பிறகு, வரும் 17ந் தேதி முதல் கர்நாடகாவில் கல்லூரிகள் திறக்கப்படுகின்றன. கல்லூரிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் என அனைவரும், 72 மணி நேரத்திற்கு முன்னதாக எடுத்த கொரோனா பரிசோதனையின் முடிவுகளை, முதல் நாளில் சமர்பிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...