Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுப்பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு: தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

சென்னை: அரசுப் பணிகளில் வழங்கப்படும் பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை நேற்று தள்ளுபடி செய்தது. தமிழகத்தில் அரசு பணி நியமனங்களுக்கு 69 சதவீதம் இடஒதுக்கீடு என்பது நடைமுறையில் வருகிறது. இந்நிலையில் கடந்த 2003 முதல் அரசு பணியில் உள்ளவர்களுக்கு பணிமூப்பு மற்றும் பதவி உயர்வுக்கும் சுழற்சி முறையில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்பட்டு வந்தது. இதையடுத்து முதலாவதாக தமிழக அரசின் இந்த நடைமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், சுழற்சி முறையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2016ல் உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், கடந்த 2016ல் தமிழக அரசு பணி மூப்பு, பதவி உயர்வுக்கான இடஒதுக்கீட்டை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சட்ட விதியில் திருத்தங்கள் கொண்டு வந்தது. இந்த சட்டவிதிகளை எதிர்த்து அரசின் பல்வேறு துறைகளை சார்ந்த 60க்கும் மேற்பட்ட அதிகாரிகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‘‘அரசு ஊழியர்கள் சட்ட விதிகளில் மாநில அரசு திருத்தம் செய்துள்ளது என்பது அந்த விதிகளுக்கு புறம்பாக பின்பற்றப்பட்ட நடைமுறையாகும். இதனை ஏற்க முடியாது. குறிப்பாக, இந்த நடைமுறையால் மறைமுகமாக 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கியதாக கருதப்படும். மேலும், அரசு ஊழியர்களுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில் மீண்டும் பணி மூப்பு பட்டியலை 12 வாரங்களுக்குள் புதிதாக தயாரிக்க வேண்டும்’’ என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive