
1. மேல்நிலை இரண்டாமாண்டு விடைத்தாட்கள் திருத்தும் முகாம் 27.05.2020 அன்று , முதல் நடைபெறவுள்ளதால் 26.05.2020 அன்று அனைத்து முதுகலை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைபுரிய வேண்டும் எனவும் , ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வருகைதந்திருப்பதை தலைமையாசிரியர் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
2. கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக ஆசிரியர்கள் சமூக இடைவெளிவிட்டு அமர்ந்து விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களின் நலன் கருதி கூடுதல் விடைத்தாள் மதிப்பீட்டு மைங்கள் அமைக்கப்பட்டுள்ளது . எனவே அனைத்து முதுகலை ஆசிரியர்களும் கட்டாயம் முகாம் பணியாற்றிட வேண்டும் எனவும் , எந்த ஆசிரியருக்கும் விடைத்தாள் மதிப்பீட்டு பணியிலிருந்து விலக்கும் அளிக்கப்பட மாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது .3. விடைத்தாள் திருத்தும் முகாம் கீழ்காணும் விவரப்படி நடைபெறவுள்ளது .
1)DCE / SO 27.05.2020
2 ) AE'S 28.05.2020
4. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முன்னிட்டு 21.05.2020 அன்று அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது , தற்போது தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் எந்த ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகைதர வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.
5. முதுகலை ஆசிரியர்களின் மைய மதிப்பீட்டு முகாம் பணிகள் சார்ந்த விவரம் ,
சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் அனுப்பிவைக்கப்படும் எனவும்
தெரிவிக்கப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...