![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/b9/14/bf/b914bf1893a71091f712c89c6ee9ee18.jpg)
தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு மே 3-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் எந்த தளர்வும் இல்லை எனத் தெரிவித்துள்ளது. இதனால் ஊரடங்கை மீறுபவர்கள் மீது போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/78/03/aa/7803aa343799f1d7858b057bafd93341.jpg)
பொதுமக்கள் கூட்டமாக வெளியே வருவதை தடுக்கும் வகையில், ரேஷன் பொருட்களை வாங்க ஏதுவாக மே 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் எனவும் மே 4 ஆம் தேதியில் இருந்து ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான 3 மாதங்களுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊருக்கு போக வழியில்ல.. பசிக்கு உணவு இல்ல..
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...