
என்னை செதுக்கிய மாணவர்கள் எனும் ஆயிசா நடராஜனின் மாணவர்களுடனான அனுபவ கட்டுரைய வாசித்தேன். நடராஜனை பலரையும் போலவே ஆய்சா மூலம் தான் அறிமுகம். அந்த சிறுகதை என் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தை கொண்டு தனி புத்தகமே போடலாம். இது யாருடைய வகுப்பறை என்ற புத்தகமும் முக்கியமானது. அந்த வகையில் நீண்ட காலமாக படிக்க நினைத்த புத்தகம் இது. உண்மையில் இந்த ஆசிரியர் பெருசு மாணவர் சிறுசு என்ற கருத்தாக்கமெல்லாம் நாமே உருவாக்கி கொண்டதி தானே ஒழிய இயற்கை அளித்ததி இல்லை தானே. அவர் சந்தித்த அவரையே வியக்க வைத்த மாணவர்கள் தான் இந்த புத்தகத்தின் நாயகர்கள். மாணவர்கள் என்றதும் யாரும் மதிப்பெண்ணோ மெடலோ எடுத்தவர்கள் இல்லை. வாழ்க்கையை உண்மை, நம்பிக்கை கொண்டி வாழ்ந்தவர்கள். அவர்கள் தாம் நாயகர்கள் ஆகி இருக்கிறார்கள். இப்படி எல்லா ஆசிரியரையும் எழுத சொல்ல வேண்டும். நிச்சயமாக மனிதத்தின் மீது காதல் பிறக்கும்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...