
சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், கல்லேரிப்பட்டி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அமுதா தலைமையில் திருவள்ளுவர் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.முன்னதாக ஆசிரியர் ஜோசப் ராஜ் மாணவர்களுக்கு திருவள்ளுவர் ஆண்டின் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள். ஆங்கில ஆண்டுடன் திருவள்ளுவர் வாழ்ந்த காலமான கி.மு. 31 கூட்டினால் வருவது திருவள்ளுவர் ஆண்டு 2020+31=2051. தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ்நாடு அரசிதழிலும் , 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல கங்களிலும் நடைமுறைப்படுத்தி வருகிறது.என கூறினார்.பின்னர் திருவள்ளுவர் ஆண்டான 2051 குறிக்கும் விதமாக 2051 வடிவில் அமர்ந்து யோகாசனம் செய்தனர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...