சிறுபான்மையின மாணவ - மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
![IMG-20191110-WA0003 IMG-20191110-WA0003](https://1.bp.blogspot.com/-tWZNlEZr0CM/XceTGtzKLwI/AAAAAAAAnFk/OSt_J-1VP_4eF-Ig3PZ1D06RH1XHvk7hQCLcBGAsYHQ/s320/IMG-20191110-WA0003.jpg)
தமிழகத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில், முதல்வகுப்பு முதல், பிஎச்.டி., வரை படிக்கும், முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, பார்சி, ஜெயின் மதங்களை சேர்ந்த, மாணவ -மாணவியருக்கு, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.நடப்பாண்டில், பள்ளிப்படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்புக்கு, தகுதி, வருவாய் அடிப்படையில், கல்வி உதவித் தொகை பெற, www.scholarships.gov.in என்ற, இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு,வரும், 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி உள்ள சிறுபான்மையின மாணவர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...