![](https://assets-news-bcdn-ll.dailyhunt.in/cmd/resize/400x400_60/fetchdata15/images/a7/09/9b/a7099b51c840dac55d04f8f8a49083ba.jpg)
வரும் செப்டம்பர் 5ம் நாள் ஆசிரியர் தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியா்கள் சிறந்த ஆசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்
இந்தியாவின் இரண்டாவது குடியரசுத்தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5 ம் நாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்படுவது வழக்கம். இன்னும் சில தினங்களில் ஆசிரியர் தினம் வருவதை தொடர்ந்து, சிறந்த ஆசிரியருக்கான விருது பெரும் ஆசிரியாகள் பட்டியல் தயாராகி வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் ஈரோட்டை சேர்ந்த ஆசிரியர் மன்சூர் அலி மற்றும் கரூரை சேர்ந்த ஆசிரியர் செல்வ கண்ணன் ஆகியோர் சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருக்கும் வரும் செப்.5-ம் தேதி குடியரசு தலைவர் மாளிகையில் நடக்கும் விழாவில், குடியரசு தலைவர், விருதை வழங்க உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...