Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய பட்ஜெட் 2019 - 2020 | முக்கிய அறிவிப்புகள்!


➤ 2019-2010ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
➤ மத்தியில் மோடி அரசு மீண்டும் பொறுப்பேற்றபின் தாக்கல் செய்யப்படும் முதல்பட்ஜெட்
2019- 2020-ம் பொதுபட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...
➤ உணவு பாதுகாப்பு திட்டத்திற்கு கடந்த 5 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரிப்பு
➤ 2014-ல் ஆட்சியமைக்கும் போது 1.55 லட்சம் கோடி டாலராக இருந்த பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளில் 2.7 லட்சம் கோடி டாலராக உயர்வு
➤ மேக் இன் இந்தியா திட்டம் இந்தியாவின் சொத்தை அதிகரிக்கிறது
➤ இந்திய பொருளாதாரம் உலகின் 3-வது பொருளாதாரமாக விளங்குகிறது
➤ நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தனியார் நிறுவனங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன
➤ 2-வது கட்ட பாரத் மாலா திட்டத்தில் மாநில அளவிலான சாலைகள் அமைக்கப்படும்
➤ ஆறுகளை சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்
➤ வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு புதிய சீர்திருத்தம் கொண்டுவரப்படும்
➤ மலிவு விலை வீடுகள் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும்
➤ 2030-ம் ஆண்டுக்குள் ரயில்வே துறையில் 50 லட்சம் கோடி முதலீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்
➤ ஒரே நாடு ஒரே மின்சார விநியோக அமைப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்
➤ நாடு முழுவதும் சம அளவில் மின்சார விநியோகம் மேற்கொள்ள ஒரே நாடு ஒரே மின்சார திட்டம செயல்படுத்தப்படும்
➤ ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்கு குறைவாக வர்த்தம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு பென்சன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்
➤ சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.350 கோடி பட்ஜெட்டில் ஒக்கீடு
➤ சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு 2% வட்டி மானியம் தரப்படும்
➤ ஆண்டுதோறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டம்
➤ ரயில்வே துறையின் முதலீட்டு திட்டங்களுக்கு ரூ.50 லட்சம் கோடி தேவை
➤ ரயில்வேயில் புதிய முதலீடுகளை செய்ய தனியார் பங்களிப்பை பயன்படுத்திக் கொள்ளப்படும்
➤ தேசிய அளவிலான மின் தொகுப்பை போல எரிவாயு தொகுப்பு, தண்ணீர் தொகுப்பு உருவாக்கப்படும்
➤ சமூகநல திட்டங்களுக்காக பணியாற்றும் நிறுவனங்களும் சந்தையில் பட்டியலிடப்படும்
➤ காப்பீட்டு இடைநிலை நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
➤ ஒரு பிராண்டு பொருள் விற்பனை நிறுவனங்களுக்கான விதிமுறை தளர்த்தப்படும்
➤ 2022-ம் ஆண்டுக்குள் 1.95 கோடி வீடுகள் கட்டித்தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
➤ நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் 7 கோடி பேருக்கு எரிவாயு இணைப்பு தரப்பட்டுள்ளது
➤ மீன்வள மேம்பாட்டு அமைப்பு உருவாக்கப்படும்
➤ நாட்டின் 97% கிராமங்களுக்கு சாலை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன
➤ 5 ஆண்டுகளில் 1.25 லட்சம் கி.மீ. நீளச் சாலைகள் மேம்படுத்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது
➤ 1.35 லட்சம் கி.மீ. சாலைகளை மேம்படுத்தும் திட்டத்துக்கு ரூ.80,250 கோடி செலவிடப்படும்
➤ கிராம தொழில்களை மேற்கொள்ள 75,000 தொழில் முனைவோர்களுக்கு பயிற்சி தரப்படும்
➤ மூங்கில், தேனீ வளர்ப்பு, காதித் தொழில்கள் மேம்பாட்டுக்காக 100 மையங்கள் உருவாக்கப்படும்
➤ 10,000 விவசாய உற்பத்தியாளர் மையங்கள் உருவாக்கப்படும்
➤ 2024-ம் ஆண்டுக்குள் அனைத்து குடும்பங்களுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை
➤ மத்திய - மாநில குடிநீர் திட்டங்களை ஒருங்கிணைத்து அனைவருக்கும் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்
➤ நாடு முழுவதும் 9.6 கோடி கழிப்பறைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்
➤ ஒவ்வொரு கிராமத்திலும் திடக்கழிவு மேலாண்மை திட்டமும் தூய்மை இந்தியா திட்டத்தில் சேர்க்கப்படும்
➤ கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2.7 ட்ரில்லியனாக அதிகரிப்பு
➤ நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 3 ட்ரில்லியன் டாலராக இருக்கும்
➤ அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 ட்ரில்லியன் டாலரை எட்டும்
➤ ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறை புதிய இந்தியாவிற்கு வித்திட்டது.
➤ ஒவ்வொரு துறையையும் டிஜிட்டல் மயமாக்க மத்திய அரசு நடவடிக்கை
➤ பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் தேவை -நிர்மலா சீதாராமன்
➤வாங்கும் திறன் அடிப்படையில் 3 வது பொருளாதார வல்லரசாக இந்தியா விளங்குகிறது.
➤அனைவருக்கும் வீடு கழிவறையை உறுதி செய்வதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்படுகிறது.
➤நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்த தொழில் மண்டல வழிப்பாதைகள் அவசியம்
➤ செயல்பாடு, சீர்திருத்தம், முன்னேற்றம் என்ற கொள்கையின்  அடிப்படையில் மத்திய அரசு செயல்படுகிறது - நிர்மலா சீதாராமன், மத்திய நிதி அமைச்சர்
➤ மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்ளுக்கு மானியம் வழங்கப்படும்!
 ➤வங்கி முறைகேடுகள் தடுப்பு முறைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
➤கடந்த 5 ஆண்டுகளில் மறைமுக வரிச்சுமை குறைக்கப்பட்டுள்ளது.
➤மின்கட்டண முறையில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டியது அவசியம்
➤கங்கை நதியில் சரக்குப் போக்குவரத்தை 4 மடங்காக அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை
➤ரயில்வே துறையின் உட்கட்டமைப்பை மேம்படுத்த 2018 முதல் 2030 வரை ரூபாய் 50 ட்ரில்லியன் முதலீடு தேவை
➤இந்தியாவில் ஆண்டுதோறும் ரூபாய் 20 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது.
➤மாநிலங்கள் இடையிலான மின் தேவையை பூர்த்தி செய்ய ஒரே தேசம் ஒரே மின்தொகுப்பு திட்டம்
 ➤ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய்க்கு குறைவாக வர்த்தகம் செய்யும் சிறு குறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்.
➤ உள்கட்டமைப்புத் துறையில் முதலீட்டை ஊக்குவிக்க புதிய திட்டம்.
 ➤ வாடகை வீடுகளில் குடியிருப்பவர்களுக்காக சட்ட சீர்திருத்தம் கொண்டுவரப்படும்
 ➤ பாரத்மாலா, சாகர்மாலா திட்டங்கள் மூலம் போக்குவரத்துதுறை உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive