![Image may contain: one or more people and text](https://scontent-maa2-1.xx.fbcdn.net/v/t1.0-9/54377121_1920021701460788_6580375099927429120_n.jpg?_nc_cat=103&_nc_ht=scontent-maa2-1.xx&oh=022ae3dc3f8251a4b6a8853e0f844c08&oe=5D102A94)
⚖ நுகர்வோரின் உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மார்ச்
15ஆம் தேதி உலக நுகர்வோர் உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
நுகர்வோரின் அடிப்படை உரிமைகளை விளக்குவது அதன்மீது நடவடிக்கை எடுத்தல்
சந்தை குற்றங்களுக்கு எதிராக போராடுதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்கள்
ஆகும்.
⚖ இத்தினம் அனைத்துலக நுகர்வோர் அமைப்பின் சார்பில் அனுசரிக்கப்படும்
தினமாகும். 1962ஆம் ஆண்டு அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஜான் கென்னடி உலக
நுகர்வோர் அமைப்பின் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
⚖ அவ்வேளையில் நுகர்வோர் உரிமைகளுக்கான மசோதா பிறப்பிக்கப்பட்டது. சர்வதேச
நுகர்வோருக்கான அடிப்படை உரிமைகளைப் பெற இந்த மசோதா வழிவகுத்தது. இதனை
குறிப்பிடும் வகையில் இத்தினம் 1983ஆம் ஆண்டுமுதல் கொண்டாடப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...