விரும்பிய டிவி சேனல்களை பார்க்கும் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 100
சேனல்களுக்கு ரூ.153 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வரும் பிப்ரவரி 1
முதல் அமலுக்கு வரும் என தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்)
தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் குறைந்தபட்சம் 100 சேனல்களை தேர்ந்தெடுக்க
வேண்டும். இதற்கு ரூ.153.40 (ஜிஎஸ்டி உட்பட) கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த 100 சேனல்கள் இலவச சேனல்களாகவோ, கட்டண சேனல்களாகவோ இருக்கலாம்.
அதேநேரம், இந்த குறைந்தபட்ச கட்டண திட்டத்தில் எச்.டி. தொழில்நுட்ப
சேனல்களை தேர்ந்தெடுக்க முடியாது.
மேலும் எச்.டி. சேனல்கள் அல்லது கூடுதல் சேனல்கள் தேவைப்படுபவர்கள்
அதற்குரிய கூடுதல் கட்டணத்தை செலுத்தி பார்க்கலாம்.
இதுபோல ஒரு சேனலுக்கு அதிகபட்சமாக மாதத்துக்கு ரூ.19-க்கு மேல் கட்டணம்
வசூலிக்கக் கூடாது என டிராய் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. இது தொடர்பான
குறுஞ்செய்தியை வாடிக்கையாளர்களுக்கு டிராய் அனுப்பி வருகிறது. அதில்
பல்வேறு சேனல்களின் கட்டண விவரங்கள் அடங்கிய இணைப்பும் இடம்பெற்றுள்ளது.
டிராயின் இந்த நடவடிக்கையால் பார்க்காத சேனல்களுக்கு பணம் செலுத்த வேண்டிய
கட்டாயம் இனி இருக்காது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...