![](https://4.bp.blogspot.com/-wiW7E5y-2wQ/XAe-xrJuC9I/AAAAAAAAwV4/l9wWGYx5A1MaWZiAaRUXT7TUhDjd0LmhQCLcBGAs/s320/Screenshot_20181205-173259__01.jpg)
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பொறுப்பு பதிவாளர் தியாகராஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
யு.ஜி.சி.,யின் அனுமதியுடன், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், முழு நேர, பகுதிநேர பிஎச்.டி., ஆய்வு படிப்பு நேரடி முறையில் நடத்தப்படுகிறது. இதில், 2019க்கான சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவங்கியுள்ளது.
தமிழ், ஆங்கிலம், மேலாண்மை, கல்வியியல், இயற்பியல், வேதியியல், விலங்கியல், குற்றவியல், மின்னணு ஊடகவியல், புவியியல், கணினி அறிவியல், பண்டைய வரலாறு மற்றும் தொல்பொருளியல் பாடங்களுக்கு வரும் 29க்குள் விண்ணப்பிக்கலாம்.விபரங்களை www.tnou.ac.in ல் தெரிந்து கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...