5-ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுடன் தரையில் அமர்ந்து திருவண்ணாமலை ஆட்சியர் பாடம் கேட்டுள்ளார்.
![](https://1.bp.blogspot.com/-el6uz95HFMY/WnnVILR89cI/AAAAAAAAHVs/u16yj5b3MRgVciw9rU-QNMIpxRlQebWVgCLcBGAs/s400/_20180206_214629.jpg)
இதை படித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, அந்த மாணவிகளை அழைத்து திட்டங்களை முழுவதுமாக கேட்டறிந்தார். அவர்களின் திறமையை பாராட்டும் விதமாக தன்னுடைய ஆட்சியரின் இருக்கையில் அமர வைத்தும் அழகு பார்த்தார். அத்தோடு மட்டுமில்லாமல் இன்று அம்மாணவிகளை அழைத்து திருவண்ணாமலை வேங்கிகால் புதூரில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் 5-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு பூஜாவையும், வைஷ்ணவியையும் தங்களின் சுற்றுச் சூழல் குறித்த திட்டத்தை மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொல்லி பெருமைப்படுத்தினார். மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் முதன்மை கல்வி அலுவலர் ஜெயகுமார் ஆகிய இருவரும் ஒன்றாக தரையில் அமர்ந்து கைத்தட்டி மாணவர்களின் பாடத்தை கேட்டறிந்தனர்.
பள்ளி மாணவிகள்தானே என்று அலட்சியமாக இல்லாமல் மாணவர்களளின் திறமைகளையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற ஆட்சியரின் இச்செயல் பாராட்டுக்குரியது என ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Great initiative sir
ReplyDeletesuperb!
ReplyDelete