சென்னை: சட்டப் பேரவையில் கேள்வி நேரத்தின் போது துறைமுகம் பி.கே.சேகர்பாபு
(தி.மு.க.) பேசியதாவது: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு கல்லூரிகளில் சேர்ந்து கம்ப்யூட்டர் வகுப்பை
தேர்வு செய்த ஏழை, எளிய மாணவர்களுக்கு கணினி இல்லாததால் அவர்களின் படிப்பு
பாதிக்கப்படுகிறது. எனவே கடந்த ஆண்டு பிளஸ்-2 மாணவர்களுக்கு லேப்டாப்
உடனடியாக வழங்க வேண்டும். இதற்கு அமைச்சர் செங்கோட்டையன் "உயர்
நீதிமன்றத்தில் தடை உத்தரவு உள்ளது. தடை விலக்கி கொள்ளப்பட்ட பின்னர்
மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்" என்றார்.
லேப்டாப் வழங்காததால் மாணவர்கள் பாதிப்பு என்று கூறுகிறார்கஇலே.மடிக்கணினி எப்படி இயக்குவது என்று கற்று தரும் அரசு கலை கல்லூரியில் பணியாற்றும் கணினி பயிற்றுநர்களின் 15 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றி தர யாரும் முன்வரவில்லை இவர்கள் மாணவர்களின் நலனை பற்றி பேசுகிறார்கள்
ReplyDelete