Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் அறிக்கை

💥தமிழகத்தில் 2010 ஆகஸ்ட் க்கு பின்பு சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்கள்,அரசு உதவி பெறும் (non-minority) ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதிதேர்வு எழுதவேண்டும் என தமிழக அரசு தெரிவித்தது.பல்வேறு காலகட்டங்களில் துணிந்து போராடியது நமது பேரியியக்கம்.


  💥2012ல் தனியார் பள்ளி ஆசிரியர்கள் 599 பேரை அரசு பணிநீக்கம் செய்தது.நம்து இயக்கம் தொடர்ந்த வழக்கில் தடையாணை பெற்று பின்பு நீதி மன்றம் உடனடியாக அவர்களை பணியில் சேர்க்கவேண்டும் என தீர்ப்பளித்தது.இதன்விளைவாக பணியில அரசு் சேர்த்தது.இன்று வரை பணபலன்களை பெற்று வருகின்றார்கள்.இது தகுதித்தேர்வுக்கே பலத்த அடி கொடுத்தது நமது பேரியியிக்கம்.......
         
         💥2011ல் மே மாதம் சீனியாரிட்டி அடிப்படையில் 3200 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது....அதே ஆண்டு நவம்பர் மாதம் 300 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது.. இவர்கள் அனைவருக்கும் டிசம்பர் மாதம் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது....ஆனால் அரசு மே மாதம் சான்றதழ் சரிபார்க்கப்பட்ட வர்களுக்கு பணிவரன்முறை ,தகுதிகாண்பருவம் என அனைத்தும் வழங்கியது......
   
          💥 முன்னுரிமை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை,தகுதிகாண் பருவம் என முடித்து தராமல் அரசு அவர்கள் வயிற்றில் அடித்தது......முன்னுரிமை அடிப்படையில் முன்னால் இராணுவத்தினர்,கலப்பு திருமனம் செய்தவர்கள்,மாற்றுத்திறனாளிகள்,விதவைகள்,கணவனால் கைவிடப்பட்டவர்கள்,அருந்ததியினர்,அரசுக்கு நிலத்தை தானம் கொடுத்தவர்கள்-----முன்னுரிமையில் நியமனம் பெற்றவர்களுக்கு தகுதிதேர்வு எதற்கு----முன்னுரிமை என்றால் என்ன என இயக்கம் அரசிடம் போராடியது...தினம்தோறும் இயக்கம் DPI,,முதன்மை செயலர்,பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ,தமிழக முதல்வர் ,பத்திரிக்கை செய்தி என்று என்று வந்தவன்னம் செய்தனர்.......ஏமாற்றமே மிஞ்சியது

            💥2016ல் மீண்டும் அம்மா அவர்கள் பதவியேற்றபோது  ஜாக்டோ-ஜியோ அமைப்புகள் போராட்டம் என இறங்காதபொழுது ----தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் அம்மா அவர்கள் பதிவியேற்ற ஒரு மாதத்திலே பத்து அம்ச கோரிக்கையை வளியுறுத்தி முதன்மைக்கோரிக்கையான தகுதிதேர்விலிருந்து சீனியாரிட்டி அடிப்படையில் நியமனம் பெற்றவர்களுக்கு விலக்களிக்கவேண்டும் என மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.........

             💥 இவ்வளவும் நடத்தி வெற்றிபெற முடியாததால் இறுதியாக சென்னை உயர்நீதி மன்றத்தில் மிகப்பெரிய வழக்கறிஞரான மதிப்பு மிகு.சங்கரன் அவர்கள் மூலம் நம்பேரியியக்கம் வழக்கு தொடரப்பட்டது.....

💥தகுதித்தேர்வால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களை காப்பாற்றவேண்டும் என என் அருமைத் தலைவர் அ.மாயவன் அவர்களும்,மாநிலத் தலைவர் திரு.பக்தவச்சலம் அவர்களும் சொந்தவேலைகளையும்,குடும்பத்தையும் தவிர்த்து ஒவ்வொரு மண்டலமாக சென்று கணக்கெடுத்து பாதிக்கப்பட்டவர்களின் விளக்கத்தையும் பெற்று அரும்பாடு பட்டிருக்கிறார் என்பதையும் இந்த வேளையில் தெரிவித்துக்கொள்கின்றேன்.....

               💥இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இந்த மாதம் 5 -ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது--இந்த தீர்ப்பு ஒட்டுமொத்த அரசு பட்டதாரி ஆசிரியர்கள்,சிறுபான்மையற்ற (non-minority) பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் இன்பசெய்தியாக வரும்,வாழ்வில் சந்தோசம் பொங்கும்,மன உளைச்சல் இல்லாமல் இனபமாக வாழ்வீர்கள்----இந்த வெற்றிக்கு உன்னதமான இயக்கம்,உண்மையான இயக்கம் தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் என கம்பீரமாக சொல்லுவேன்------

💥இந்த வழக்கை நடத்த எந்த ஒரு ஆசிரியரிடத்திலும் பத்து பைசா கூட என் அருமை தலைவர் அ.மாயவன் அவர்கள் பெறவில்லை என்பதையும் தெரிவித்துகொள்கின்றோம்

   💥இந்த தீர்ப்பின் மூலம் 18000 ஆயிரம் தனியார் பள்ளி ஆசிரியர்களும்,6500 அரசு பள்ளி ஆசிரியர்களும் பயனடைய் இருக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்...

Note:

     சிறுபான்மையற்ற பள்ளிகளில் இது தான் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்கப்பட்டதை எதிர்த்து நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றுள்ளுள்வோம்....அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பட்டுள்ளது----இனி எந்த ஒரு பட்டதாரி ஆசிரியரும் நிர்வாகத்து எழுதி தரவேண்டாம் என தெரிவித்துக்கொள்கிறோம்......

           இவண்
மு.முருகேசன் மாவட்ட தலைவர்
(நிறுவனர்.அ.மாயவன் அவர்கள்)
தமிழ்நாடு உயர்நிலை-மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்.திண்டுக்கல்




3 Comments:

  1. Pls help me for the B.Ed., computer science graduate teachers recruitment. We are greatly affected by the government. The Govt could not consider the computer science teachers recruitment.
    When I read this article, I hope, the respected Honble Advocate Mr Sankaran will take care of our society and get the justice for the computer science B.Ed., completed teachers life. Thank you.

    ReplyDelete
  2. They are give many works to computer teachers. But they treat us very worst

    ReplyDelete
  3. Sir
    My certificate verification dt : 23/07/2010
    Appointment DT: 29/12/2011
    Should i also to write TET

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive