Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

எத்தனை பேருக்கு தெரியும்...? Police Station போகாமலேயே, ஆன்லைனில் எப்ஐஆர் பதிவு !!

பிரச்சனைகள் இல்லாதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில பிரச்சனைகளுக்கு தீர்வு நம்மிடமே இருக்கும் . சில பிரச்சனைகளுக்கு தீர்வு வேறு ஒருவர் மூலம் கிடைக்கும் . ஆனால் சில பிரச்சனைகளை காவல் நிலையத்தின் மூலமாக தான் தீர்க்க முடியும் . இது போன்ற பிரச்சனையின் போது, காவல் நிலையம் செல்வதற்கே பெரும்பாலான மக்கள் தயக்கம் காண்பிப்பர்.



இந்நிலையில், ஆன்லைன் மூலமாகவே எப்ஐஆர் சேவை பெறலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் .

விளக்கம் :

தழிழ்நாடு காவல் துறை, வலைதல முதல் தகவல் அறிக்கையை (Online FIR) சமீபத்தில் துவங்கியது. இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே எப்ஐஆர் சேவையை பெறலாம் . இந்த வசதி தமிழ்நாடு மட்டுமின்றி டெல்லி, மும்பை, பெங்களூர், ஹரியானா, உத்திரபிரதேசம் போன்ற இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் செயல்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

எப்படி பயன்படுத்துவது ?

தவறான புகார்களை பதிவேற்றம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.

தவறான தகவல்களை பதிவேற்றம் செய்யும் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும்.

உங்கள் புகார்களை பதிவு செய்ய இந்த இணையத்தளத்திற்கு செல்லவும்

http://www.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?0
District ,Name , Date of Birth, Address, Mobile Number, Email ID உள்ளிட்ட பல தகவல்களை புகார் கொடுக்க விரும்புவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

Subject: உங்கள் புகார் எந்த வகை என்பதை தேர்வு செய்ய வேண்டும்

Date of Occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற தேதி பதிவு செய்யவும்

Place of occurrence: நிகழ்வு/சம்பவம் நடைப்பெற்ற இடத்தை பதிவு செய்யவும்

Discription: உங்கள் புகாரை முழுமையாக இங்கே பதிவுசெய்யலாம்

attach Documents அட்டாச் செய்யவும்

[Max. 4MB (PDF, PNG, JPEG) Files alowed]:

உங்கள் புகார் தொடர்பாக ஏதேனும் கோப்புகளை இணைக்க வேண்டுமென்றால் அந்த கோப்புகள் அதிகப்பட்சமாக 4MB க்குள்ளாகவும் PDF, PNG, JPEG போன்ற வடிவங்களில் இருத்தால் மட்டும் பதிவேற்றம் செய்ய இயலும்.

Security Code:

இவை அனைத்தும் நிறைவு செய்தப் பிறகு கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பு குறியீட்டு எண்னைப் பதிவு செய்ய வேண்டும்

Register:

அனைத்தும் செய்து முடித்தப் பிறகு உங்கள் புகாரை பதிவு செய்து நீங்கள் பதிவு செய்ததற்கான ரசீது மற்றும் எப்.ஐ.ஆர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

Tamilnadu Police Citizen Portal என்ற இணையத்தளத்தில் உங்கள் எப்.ஐ.ஆர் எண்னைப் பயன்படுத்தி உங்கள் புகார் எந்த நிலையில் உள்ளது என்பதையும் தெரிந்துக்கொள்ள முடியும்

தவறான புகார்கள் பதிவேற்றம் செய்தால் நடவடிக்கை ..?

தவறான புகார்களை பதிவேற்றம் செய்தால் புகார்தாரர் மீது இந்திய தண்டனைச் சட்டப்படி வழக்கு தொடரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive