Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது சார்ந்த பிரச்சனையில் முடங்கிய நிலையில் தமிழக அரசு ஊழியர் சங்கம் குற்றச்சாட்டு

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உட்பட பல்வேறு பிரச்னைகளில் தமிழக அரசு செயல்படாமல் முடங்கிய நிலையில் இருக்கிறது,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் செல்வம் குற்றம் சாட்டினார்.

மதுரையில் அவர் கூறியதாவது: அரசு ஊழியர்கள் நலன் கருதி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என கடந்தாண்டு பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. கடந்த சட்டசபை தேர்தல் மற்றும் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதற்காக சாந்தாஷீலாநாயர் தலைமையில் குழுவையும், அமைத்தார். இக்குழு, அரசு ஊழியர்களின் கருத்துக்களை கேட்டறிந்தது. இந்த குழுவிற்கு, கால நீடிப்பு செய்தும் அரசு உத்தரவிட்டது. இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து நடவடிக்கை இல்லை. குழுவின் தலைவர் சாந்தாஷீலா நாயரும் விருப்ப ஓய்வில் சென்று விட்டார். குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.
அரசின் 148 துறைகளில் மூன்றரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. தற்போது அரசு பணியாளர் தேர்வாணையம் 3,567 பதவிகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கோடி பேர் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி, அரசு ஊழியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
சம்பள குழு அறிக்கை அமல்படுத்தப்படும் வரை, இடைக்கால நிவாரணமாக, 20 சதவீதம் வழங்க வேண்டும். இப்பிரச்னைகளில் மாநில அரசு செயல்பாடின்றி முடங்கி கிடக்கிறது.

கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அடுத்தடுத்து போராட்டங்கள் நடத்தப்படும். ஏப்., 25 முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும், என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive