Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலை பதிவாளருக்கு அபராதம் : உயர்நீதிமன்றம்!

அண்ணா பல்கலை பதிவாளருக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் சந்திரமோகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா
பல்கலைக் கழகத்தின் மீது அவமதிப்பு வழக்கு தொடுத்துள்ளார். அதில், எனக்கு பதவி உயர்வு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் உத்தரவை அமல்படுத்தவில்லை. எனவே, அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி நாகமுத்து முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்ற உத்தரவை அண்ணா பல்கலை பதிவாளர் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. நீதிமன்ற உத்தரவை அவமதித்த அவருக்கு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கிறேன். மேலும் உத்தரவுப்படி பேராசிரியருக்கு நான்கு வாரத்துக்குள் பதவி உயர்வு வழங்க வேண்டும். அபராதத் தொகையை 7 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால், 15 நாள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.
மேலும் இந்த மனுமீதான விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive