Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நியமன ஆணை 5 மாதமாக காத்திருப்பு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பணிக்கு, தேர்வு செய்யப்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்பு பணி முடிந்து, ஐந்து மாதங்களாக, பணி நியமன ஆணைக்காக காத்திருக்கின்றனர். மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் ஏற்பட்ட காலியிடங்களை நிரப்ப, 2016 ஜூலையில், விளம்பரம் வெளியிடப்பட்டது. ஆக., 17ல், போட்டி தேர்வு நடத்தப்பட்டது.தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, நவ., 5ல், சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடத்தி முடிக்கப்பட்டது. 


இப்பணி முடிந்து, ஐந்து மாதங்களாகியும், தேர்வு செய்யப்பட்ட, 119 விரிவுரையாளர்களுக்கு, இன்னமும் நியமன ஆணை வழங்கப்படவில்லை. வேலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஏற்கனவே சுயநிதி கல்லுாரி மற்றும் பள்ளிகளில் செய்து வந்த வேலையை விட்டு விட்டனர். தற்போது, அரசு பணி ஆணையும் கிடைக்காமல், இருந்த வேலையையும் விட்டு, பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். எனவே, உடனடியாக, பணி நியமன ஆணையை அரசு வழங்க வேண்டும் என, முதல்வர் அலுவலகத்தில், அவர்கள் மனு கொடுத்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive