Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு, 2 முதல், 4 சதவீதம் வரை அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலைவாசி உயர்வை சமாளிக்கும் வகையில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், அகவிலைப்படி மாற்றி அமைக்கப்படும். 


அதன்படி, ''இந்த ஆண்டு ஜனவரி, 1 முதல், 2 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படியை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கிறோம்,'' என, மத்திய அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தலைவர், கே.கே.என்.குட்டி தெரிவித்துள்ளார். 


நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டில், 4.95 சதவீதம் அளவுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்பட வேண்டும். ஆனால், தசம எண்கள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. 

மேலும், 2016 ஜூலை, 1 முதல் அகவிலைப்படியை, 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்பட்டது. அதனால், தற்போது, 2 சதவீதம் அளவுக்கே உயர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், 4 சதவீதம் வரை வழங்கப்பட வேண்டும் என, ஊழியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive