Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 தேர்வு, இன்று துவங்கும் நிலையில், தனியார் பள்ளி தேர்வு மையங்களில் முறைகேட்டை தடுக்க, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. பிளஸ் 2 தேர்வு, இன்று தமிழகம், புதுவையில், 2,434 தேர்வு மையங்களில் நடக்கிறது. மார்ச், 31 வரை நடக்கும் இந்த தேர்வில், ஒன்பது லட்சத்து, 33 ஆயிரத்து, 631 பேர் பங்கேற்கின்றனர்.
தேர்வில் முறைகேடு : களை தடுக்க, 4,000 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தேர்வு மையங்களிலும், நிலையான பறக்கும் படையும் கண்காணிப்பு பணியில் இருக்கும். முக்கிய பாடத் தேர்வுகளில், அண்ணா பல்கலை பேராசிரியர் குழு ஆய்வு நடத்தும்.


தேர்வு குறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த ஆண்டு தனியார் பள்ளி தேர்வு மையத்தில், சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து, தேர்வு எழுதினர். அவர்களுக்கு, ஆசிரியர்களே ஒரு மதிப்பெண் கேள்விக்கு, பதில் எழுதி கொடுத்ததை கண்டுபிடித்தோம். இதுகுறித்த வழக்கு, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இரு ஆண்டுகளுக்கு முன், கிருஷ்ணகிரி பள்ளி தேர்வு மையத்தில், ஆசிரியர்கள் மூலம், 'வாட்ஸ் ஆப்' வழியே கணித வினாத்தாள் வெளியானது. 


இது போன்ற தில்லுமுல்லுகள் நடக்காமல் இருக்க, தனியார் பள்ளி தேர்வு மையங்களை, தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. தனியார் பள்ளி தேர்வு மையங்களில், தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் என, அனைவரும் தேர்வு நாட்களில், காலை, 8:30 மணிக்கு மேல், பள்ளி வளாகத்தில் இருக்கக் கூடாது என, கண்டிப்பாக உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில், மொபைல் போன் மற்றும், 'வை - பை' பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive