Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பட்ஜெட்டில் அறிவித்தபடி மத்திய அரசு துறைகளில் 2.8 லட்சம் பேருக்கு வேலை

       மத்திய அரசு துறைகளில் ஆண்டுதோறும் ஏற்படும் காலி பணியிடங்கள், மத்திய தேர்வாணையம் மூலமாக தேர்வு நடத்தி நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு மத்திய பட்ஜெட் கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதில் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 2 லட்சத்து 80 ஆயிரம் பேரை புதிதாக நியமனம் செய்யவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. வருமான வரித்துறை, சுங்கம் மற்றும் கலால் துறை, மத்திய காவல் துறை, தொலை தொடர்பு உள்ளிட்ட துறைகளில் இந்த 2.80 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கடந்த நவம்பரில், உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெற்ற போது, வருமான வரித்துறையினர் இரவு பகலாக நாடு முழுவதும் சோதனைகளை நடத்தி தீவிரமாக பணியாற்றினர்.

இந்த துறையில் தற்போது 46,000 ஊழியர்களே உள்ளனர். ஊழியர்கள் பற்றாக்குறை என்பது அந்த சோதனைகளின் போது மிகவும் சிரமத்தை அளித்தது. இதையடுத்து, இந்த எண்ணிக்கையை 80,000 ஆக உயர்த்தவும், கலால் மற்றும் சுங்கத்துறையில் கூடுதலாக 41,000 பணியாளர்களை நியமிக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive