Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கட்டணமில்லாமல் 10 முறை பணம் எடுக்கலாம் - இன்ப அதிர்ச்சி கொடுத்த எஸ்பிஐ....!!

ஏடிஎம்மில் 10 முறை இலவசமாக பணமெடுக்கலாம்
ரூபாய் நோட்டு பண மதிப்பு இழப்பிற்கு பிறகு, நாட்டில் பல்வேறு துறைகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டது . மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டது. அந்த வேளையில் புதியதாக புழக்கத்தில் விடப்பட்ட 2,௦௦௦ ரூபாய் மற்றும் பழைய 1௦௦ ரூபாய் தாள்களை ஏ டி எம்மில் இருந்து
எடுப்பதற்கு மக்கள் கூட்டம் அலைமோதிய சம்பவம் எதனையும் யாரும் மறந்திருக்க முடியாது.
இதனை தொடர்ந்து, ஏ டி எம் இலிருந்து எத்தனை முறை வேண்டுமாளாலும் பணத்தை எடுத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்து இருந்தது அதாவது பணம் எடுப்பதற்கு கட்டணம் வசூலிக்க படமாட்டாது என தெரிவிக்கப்பட்டது . இந்த நடைமுறை தற்போது மாறி , பல தனியார் வங்கிகள் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப் படும் என தெரிவித்து இருந்தது.
அதன்படி, ஏடிஎம்.,களில் 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.50 முதல் ரூ.150 வரை கட்டணம் வசூலிக்கப்படும் என தனியார் வங்கிகள் கூறி உள்ளன. இந்நிலையில் பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியானது, ஏடிஎம்.,களில், மாதத்திற்கு 10 முறை வரை கட்டணம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது
இந்த நடைமுறையும் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வர உள்ளதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது. மேலும் சேவிங் வங்கி கணக்கில் குறைந்தபட்ச கையிருப்பாக 5௦௦௦ ரூபாய் வரை , வாடிக்கையாளர்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என எஸ் பி ஐ ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில், கட்டணமில்லாமல் மாதத்திற்கு 10 முறை ஏடிஎம் மில்லிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive