அதிக அளவில் முனைவர் பட்டம் பெற்ற மாணவ, மாணவர்களை உருவாக்குவதில் பிற
இந்திய மாநிலங்கள் அனைத்தையும் விட தமிழ்நாடு முன்னிலையில் இருப்பதாக
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சமீபத்தில் பாராளுமன்ற மேலவைக்
கூட்டத்தொடரில் வெளிப்படுத்தியுள்ளது.
அகில இந்திய உயர்கல்வி ஆய்வகம்
வெளியிட்ட சர்வே ஒன்றில் கடந்த மூன்றாண்டுகளில் (2013-14 முதல் 2015-16
வரை)இந்தியாவெங்கிலும் இயங்கி வரும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், மற்றும்
கல்வி நிறுவனங்களின் மூலமாக முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை
முறையே 69,862. 2015- 16 வரையிலான கல்வி ஆண்டில் தேர்ச்சியுற்று முனைவர்
பட்டம் பெற்ற 24,171 இந்திய மாணவர்களில் சுமார் 3,973 பேர் தமிழக
பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர்களே.
தமிழ்நாட்டைத்
தொடர்ந்து அடுத்ததாக உத்தரபிரதேசம் 2,205 முனைவர் பட்ட மாணவர்களையும்,
கர்நாடகா 1,945 முனைவர் பட்ட மாணவர்களையும் உருவாக்கித் தந்துள்ளனவாம்.
எது எப்படி இருந்தாலும் தமிழ்நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும்
அதிக்கபடியான முனைவர் பட்டதாரிகளால் பல்கலைக்கழகங்களில் நடத்தப்படும்
ஆய்வுப் பணிகளில் எந்த விதமான கவனக் குறைவுகளோ, ஆராய்சிகளில் தரகுறைவுகளோ
ஏற்பட்டு விடவில்லை. அவை நன்றாகத் தான் இருக்கின்றன. ஆனால் முனைவர்
பட்டத்துக்கான பி.ஹெச்.டி பெறுகையில் அது எவ்விதமாகப் பெறப்படுகிறது
என்பதைப் பொறுத்து அதற்கான தர வரிசை நிர்ணயிக்கப்படும். அதாவது கேட்டகிரி B
Phdகளும், எக்ஸ்டர்னல் Phd களும் ரெகுலர் Phd க்கு இணையாக கருதப்பட
மாட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...