பேராசிரியர் நியமனத்தில் நிறைய முறைகேடுகளை அண்ணாமலை பல்கலை கழகம் நடத்தியுள்ளது.
உதாரணமாக 10 -ம் வகுப்பு முடித்துவிட்டு 11&12 -ம் வகுப்பு படிக்காமல் நேரடியாக தொலைதூரகல்வி முறை மூலம் பட்டம் பெற்றவர்களை பணி அமர்த்தியுள்ளது. மாணவர்களின் சேர்க்கைக்காக புதிய பாடப்பிரிவுகளை துவக்காமல் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காகவே துவக்கியதால் தற்போது சில துறைகளில் மாணவர்களை விட பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. எனவே தான் 1080 பேராசிரியர்கள் மற்றும் 4722 ஆசிரியர் அல்லா பணியாளர்கள் மிகையாக உள்ளனர். பாடம் நடத்தாமல் வேலை செய்யாதவர்களான மேற்கண்டவர்களுக்கு வருடத்திற்கு 600 கோடி வரை சம்பளமாக வழங்கப்படுகிறது. எனவே பேராசிரியர் நியமனங்கள் மற்றும் அவர்களின் சான்றிதழ்களின் உண்மைதன்மை சம்பந்தமாக சி.பி.ஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என தமிழ்நாடு செட் நெட் விரிவுரையாளர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளத.Public Exam 2025
Latest Updates
Home »
» அண்ணாமலை பேராசிரியர்களின் பணிநிரவல் - ஒரு கண்கட்டி வித்தை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...