கேரளாவில், 15 ஆயிரம் பள்ளிகளில், தகவல் தொழில்நுட்பக் கல்வியை சிறப்பான வகையில் வழங்கும் நோக்கில், புதிய திட்டத்தை அம்மாநில அரசு துவக்கி உள்ளது.
ஒருங்கிணைக்க முடிவு:
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: வரும் நவ., 1ல், ஸ்கூல் விக்கி இணையதளம் தயாராகிவிடும். இதில், 15 ஆயிரம் பள்ளிகளில், பிளஸ் ௨ வரையிலான மாணவர்களுக்கு தேவையான தகவல்கள் அனைத்தும் மலையாளத்தில் இடம்பெறும். இந்த இணையதளத்தில் தங்கள் பள்ளி விபரங்கள், பின்னணி குறித்து மாணவர்கள் அல்லது ஆசிரியர்கள் பதிவேற்ற முடியும்.
சிற்றிதழ்:
பள்ளிகளின் கட்டமைப்பு, முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள், பள்ளிகளின் சிற்றிதழ்கள் போன்றவற்றை ஸ்கூல் விக்கியில் இடம்பெறச் செய்யலாம். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த, கல்விக்கு தேவையான விஷயங்கள் ஸ்கூல் விக்கியில் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
சிற்றிதழ்:
பள்ளிகளின் கட்டமைப்பு, முன்னாள் மாணவர்கள் குறித்த தகவல்கள், பள்ளிகளின் சிற்றிதழ்கள் போன்றவற்றை ஸ்கூல் விக்கியில் இடம்பெறச் செய்யலாம். மேலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தயாரித்த, கல்விக்கு தேவையான விஷயங்கள் ஸ்கூல் விக்கியில் கிடைக்கும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...