Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

போதையில் பள்ளிக்கு வந்த 9-ஆம் வகுப்பு மாணவர்கள்

ஆம்பூர் அருகே மது போதையில் 9-ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்குச் சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஆம்பூர் அருகே உள்ள கரும்பூர் கிராமத்தில் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவருக்கு புதன்கிழமை பிறந்த நாள் எனக் கூறப்படுகிறது. இதனால் அந்த மாணவரும்,
அவரது நண்பர்கள் உள்பட 4 பேரும் சேர்ந்து புதன்கிழமை காலையிலேயே மது அருந்தியுள்ளனர். பிறகு பள்ளிக்கு மது போதையில் சென்றுள்ளனர். வகுப்பறையில் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களது பெற்றோர் வரவழைக்கப்பட்டனர். பின்னர் மாணவர்களை எச்சரித்து அவர்களுடைய பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!